December 8, 2025, 12:39 AM
23.5 C
Chennai

பசு கடத்தியதாக சந்தேகம்-2 பேரை கடத்தி காரில் உயிருடன் எரித்துக்கொலை..

images 2023 02 19T200358.473 - 2025
எரிந்த கார்

பசு கடத்தியதாக வந்த சந்தேகத்தில் 2 பேரை பசு பாதுகாவலர்கள் கும்பல் கடத்தி காரில் உயிருடன் எரித்துக்கொன்ற கொடூர சம்பவம் ஹரியானா,ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ஹட்மிகா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜுனைத் ( 39), நசீர் ( 25). இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 2 பேரும் கடந்த புதன்கிழமை அதிகாலை தங்கள் பொலிரோ காரில் ராஜஸ்தான்-அரியானா எல்லை கிராமத்தில் உள்ள ஜுனைத்தின் உறவினரை சந்திக்க சென்றுள்ளனர்.

images 2023 02 19T200525.243 - 2025
கொல்லப்பட்ட ஜுனைத்தும், நசீரும்

அப்போது, அரியானாவை சேர்ந்த பசு பாதுகாப்பு கும்பல் ஜுனைத்தும், நசீரும் காரில் பசு மாட்டை கடத்தியதாக கருதி அவர்களை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர்.

அரியானாவின் பெரோஷ்பூர் ஹிர்கா பகுதியை சேர்ந்த ரின்கு சைனி என்ற டாக்சி டிரைவர் முதலில் ஜுனைத், நசீர் பயணித்த காரை பின் தொடர்ந்துள்ளார்.

பசு பாதுகாவலர்கள் அமைப்பை சேர்ந்த இவர் பின்னர் பஜ்ரங்தல் அமைப்பை சேர்ந்த மொனு மனீசர் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் தங்கள் குழுவினருடன் இணைந்து ஜூனைத், நசீரின் காரை இடைமறித்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

images 2023 02 19T200321.190 - 2025

பின்னர், ஜூனைத் மற்றும் நசீரை காருடன் கடத்தி சென்ற பசு பாதுகாவலர்கள் கும்பல் இரண்டுபேரையும் உயிருடன் காருக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

அரியானாவின் பர்வாஸ் கிராமத்தில் காட்டுப்பகுதியில் கார் தீக்கிரையான நிலையிலும், அதனுள் 2 பேர் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கிடப்பது குறித்தும் போலீசாருக்கு வியாழக்கிழமை தகவல் கொடுக்கபட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில், 2 பேரை உயிருடன் எரித்து கொன்றதில் தொடர்புடையதாக டாக்சி டிரைவர் ரிங்கு சைனியை ராஜஸ்தான் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

98005039 - 2025

இந்த வழக்கில் பஜ்ரங்தல் அமைப்பை சேர்ந்த அனில், ஸ்ரீகாந்த், ரிங்கு சைனி, லோகேஷ் சிங்லா, மோனு ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முக்கிய நபராக மோனுவையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் ரிங்கு சைனியிடம் ராஜஸ்தான் போலீஸ் திடுக்கிடம் தகவல் வெளியாகியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரியானாவின் நுங்க் பகுதியில் பசு கடத்தலில் ஈடுபட்டதாக ஜூனைத் மற்றும் நசீரை தாக்கிய 4 பேர் கொண்ட பசு பாதுகாப்பு கும்பல் தாக்குதலுக்கு உள்ளான 2 பேரையும் படுகாயங்களுடன் அரியானாவின் பெரோஸ்பூர் ஹிர்கா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 2 பேர் மீதும் பசு கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி போலீசிடம் கூறிய நிலையில் 2 பேரும் படுகாயங்களுடன் இருந்ததை பார்த்த போலீசார் இருவரையும் விசாரிக்காமல் அந்த கும்பலிடமே இவர்களை அழைத்து செல்லும்படி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படுகாயங்களால் 2 பேரும் மயக்கமடைந்ததால் அதிர்ச்சியடைந்த பசு பாதுகாவலர்கள் கும்பல் இருவரையும் அவர்களின் காரிலேயே அங்கிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் பர்வாஸ் கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு காருக்குள் இருவரையும் போட்டுவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காரின் எண்ணை வைத்து ஜூனைத், நசீர் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான், அரியானா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories