December 5, 2025, 8:40 PM
26.7 C
Chennai

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல்: உடற்கூறாய்வில் தெரிய வந்த அதிர்ச்சி!

மும்பை:
நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதேவி குளியறையில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூருடன் துபைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். அப்போது அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக, முதற்கட்ட தகவல் வெளியானது. இதை அடுத்து நாடெங்கும் பலத்த அதிர்ச்சியை பலரும் வெளிப்படுத்தியிருந்தனர். மேலும், திருமண நிகழ்வில் அவர் ஆடிப் பாடிய வீடியோ காட்சிகள் எல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

துபையில் நடிகை ஸ்ரீதேவி ஹோட்டலில் உள்ள குளியலறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக அவரது உடற்கூறு அறிக்கையில் தகவல் வெளியானது.

குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழப்பு நிகழ்ந்ததாக உடல்கூறாய்வில் வந்த தகவலால், பரபரப்பு தொற்றியது. இதை அடுத்து துபை ஓட்டலில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து பலரும் விவாதிக்கத் தொடங்கினர். இதில் வேறு ஏதும் சதி இருக்குமா என்றும் கேள்விகள் எழுப்பப் பட்டன.

sridevi 1 - 2025

ஆனால், ஓட்டலில் குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்துள்ளதாகவும், குளியல் அறையில் நெஞ்சுவலி ஏற்பட்டு தொட்டியில் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீதேவி ரத்தத்தில் மதுபானம் கலந்திருப்பதும் உடல்கூறாய்வில் தெரியவந்துள்ளது. எனவே, மது அருந்திய நிலையில் அவர் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்திருக்கக் கூடும் என்றும் கூறப் படுகிறது. அல்லது மது அருந்திய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மும்பைகொண்டு வரப்பட்டுள்ள ஸ்ரீதேவியின் உடலுக்கு திரையுலகப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதை அடுத்து, ஸ்ரீதேவியின் உடல் எம்பார்மிங் செய்யும் பணி தொடங்கியது.

இருப்பினும், பலராலும் நேசிக்கப் பட்ட, ரசிக்கப்பட்ட நடிகையின் திடீர் மரணமும் அவரது மரணத்தில் தோய்ந்த மர்மமும் இன்னமும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories