நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல்: உடற்கூறாய்வில் தெரிய வந்த அதிர்ச்சி!

மும்பை:
நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதேவி குளியறையில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூருடன் துபைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். அப்போது அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக, முதற்கட்ட தகவல் வெளியானது. இதை அடுத்து நாடெங்கும் பலத்த அதிர்ச்சியை பலரும் வெளிப்படுத்தியிருந்தனர். மேலும், திருமண நிகழ்வில் அவர் ஆடிப் பாடிய வீடியோ காட்சிகள் எல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

துபையில் நடிகை ஸ்ரீதேவி ஹோட்டலில் உள்ள குளியலறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக அவரது உடற்கூறு அறிக்கையில் தகவல் வெளியானது.

குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழப்பு நிகழ்ந்ததாக உடல்கூறாய்வில் வந்த தகவலால், பரபரப்பு தொற்றியது. இதை அடுத்து துபை ஓட்டலில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து பலரும் விவாதிக்கத் தொடங்கினர். இதில் வேறு ஏதும் சதி இருக்குமா என்றும் கேள்விகள் எழுப்பப் பட்டன.

sridevi 1 - 2026

ஆனால், ஓட்டலில் குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்துள்ளதாகவும், குளியல் அறையில் நெஞ்சுவலி ஏற்பட்டு தொட்டியில் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீதேவி ரத்தத்தில் மதுபானம் கலந்திருப்பதும் உடல்கூறாய்வில் தெரியவந்துள்ளது. எனவே, மது அருந்திய நிலையில் அவர் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்திருக்கக் கூடும் என்றும் கூறப் படுகிறது. அல்லது மது அருந்திய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

இந்நிலையில், மும்பைகொண்டு வரப்பட்டுள்ள ஸ்ரீதேவியின் உடலுக்கு திரையுலகப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதை அடுத்து, ஸ்ரீதேவியின் உடல் எம்பார்மிங் செய்யும் பணி தொடங்கியது.

இருப்பினும், பலராலும் நேசிக்கப் பட்ட, ரசிக்கப்பட்ட நடிகையின் திடீர் மரணமும் அவரது மரணத்தில் தோய்ந்த மர்மமும் இன்னமும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories