விருதுநகர் தஞ்சாவூர் வழியாக கன்னியாகுமரி – காசி இடையே காசி தமிழ்ச்சங்கம் வாராந்திர எக்ஸ்பிரஸ் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியது.
வண்டி எண் 16367 கன்னியாகுமரி – பனாராஸ் வாராந்திர எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை தோறும் கன்னியாகுமரியில் இரவு 8:55 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை தோறும் இரவு 11.35 க்கு சென்று சேரும்.
வண்டி எண் 16368 பனாரஸ் கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4:20 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 8:55 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
இந்த வண்டி பெட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக எல்ஹஎச்பி யாக இருக்கும்.
இந்த ரயில் தமிழகத்தில் நாகர்கோவில் திருநெல்வேலி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை சீர்காழி கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தற்போது ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் விரைவில் இந்த ரயில் இயக்கப்படும்.பயணிகள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது இந்த ரயில் தினசரி ரயிலாக இயக்க வாய்ப்பு உள்ளது.
இந்த ரயில் தமிழகத்தில் நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், பெரம்பூர், மற்றும் நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, கம்மம், வாரங்கல், சிர்பூர், ககாஸ்நகர், பால்ஹர்ஷா, கோண்டியா, பாலகாட், நைன்பூர், ஜபல்பூர், கட்னி, மைஹர், சத்னா, மாணிக்பூர், பிரக்யாராஜ் மற்றும் வாரணாசி வழியாக செல்கிறது
இந்த ரயிலில் 1st AC – 1, 2nd AC – 2, 3rd AC – 3, 3rd Economic AC – 3, sleeper – 6, UR – 4, SLRD – 1, pantry coach -1, generator – 1 என 22 எல்.எச்.பி வகை பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் தொடங்கி வைக்கப்படும் தேதி விரைவில் வெளியிடப்படும் என ரயில்வே வாரியம் கூறியுள்ளது.