February 21, 2026, 3:23 PM
30.4 C
Chennai

நாடு முழுதும் தே.ஜ.கூட்டணி ஆட்சி; கனவை நனவாக்க சந்திரபாபுவுடன் சமரசம் மேற்கொள்ளும் அமித் ஷா

புது தில்லி:

நாடு முழுதும் தே.ஜ.கூட்டணி ஆட்சி இருக்க வேண்டும் என்ற பாஜக., தலைவர் அமித் ஷா தனது ஆசையை நிறைவேற்ற, தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாகக் கூறி வரும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் சமரசப் பேச்சை தொடங்கவுள்ளார்.

இதை அடுத்து, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

மத்தியில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும் அங்கம் வகிக்கிறது. அண்மையில் மத்திய பட்ஜெட்டில், ஆந்திர மாநில அரசுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை என்ற மனத்தாங்கல் சந்திரபாபு நாயுடுவுக்கு இருந்தது. மேலும், ஆந்திரத்தை மத்திய அரசு புறக்கணித்து வருவதாகவும் அவர் தனது திருப்தியற்ற நிலையைத் தெரிவித்து வந்தார். இதனால், தாம் கூட்டணியில் இருந்து விலகப் போவதாகக் கூறி வந்தார். இருப்பினும், மாநில நலன் கருதி தனது முடிவை ஒத்திப் போடுவதாகக் கூறினார். இந்நிலையில் ஆந்திரா மறுசீரமைப்பு சட்டம், ஆந்திர மாநில அரசுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சந்திரபாபு நாயுடு முன் வைத்துள்ளார்.

இதை அடுத்து, சந்திரபாபு நாயுடுவின் அதிருப்தி மன நிலையை சரி செய்யும் விதமாகவும், பேச்சுவார்த்தை நடத்தவும் பா.ஜ.க., தேசியத் தலைவர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக சந்திரபாபு நாயுடுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று சந்திரபாபு நாயுடு சார்பில் பிரதிநிதிகள் மார்ச் 5-ம் தேதி அமித்ஷாவை சந்திக்கின்றனர். அப்போது நாயுடுவை சமரசம் செய்யவும், தேஜ., கூட்டணியில் இருந்து வெளியேறும் அவரது முடிவை மறு பரிசீலனை செய்யச் சொல்லவும் அமித்ஷா முயற்சி மேற்கொள்வார் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories