IPL 2024: அதிரடி காட்டிய தில்லி அணி

ipl 2024 - 2026

இருபத்தியிரண்டாம் நாள்
ஐபிஎல் 2024 – 12.04.2024 – மும்பை
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்         

லக்னோ அணியை (167/7, ஆயுஷ் பதோனி 55*, கே.எல். ராகுல் 39, அர்ஷத் கான் 20, டி காக் பிருத்வி ஷா 3219, குல்தீப் யாதவ் 3/20, கலீல் அகமது 2/41) டெல்லி அணி (170/4, ஜேக் ஃப்ரேசர் மெகுர்க் 55, ரிஷப் பந்த் 41, ரவி பிஷ்னோய் 2/25) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று லக்னோவில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. லக்ணோ அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான குவிண்டன் டி காக் (13 பந்துகளில் 19 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான கே.எல். ராகுல் 9.3 ஓவர் வரை விளையாடி 39 ரன்கள் (22 பந்துகள் 5 ஃபோர், 1 சிக்சர்) சேர்த்தார். இவரைத் தவிர படிக்கல் (3 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (8 ரன்), நிக்கோலஸ் பூரன் (பூஜ்யம், கோல்டன் டக்), இம்பேக்ட் பிளேயராக வந்த தீபக் ஹூடா (10 ரன்), க்ருணால் பாண்ட்யா (3 ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை.

ஆயினும் ஆயுஷ் பதோனி (35 பந்துகளில் 55 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் அர்ஷத் கான் (16 பந்துகளில் 20 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 167 ரன் எடுத்தது. டெல்லி அணியின் குல்தீப் யாதவ் 20 ரன் கொடுத்து 35 விக்கட் எடுத்தார். 

          168 ரன் என்ற இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் (8 ரன்) 3.4ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா ஏழாவது ஓவரை ஆடினார். 22 பந்துகளில் 32 ரன் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கம் தந்தார்.

22 வயதான் ஆஸ்திரேலிய வீரர், இன்று ஐபிஎல்லில் முதல் ஆட்டம் ஆடுகின்ற ஜேக் ஃப்ரேசர் மெகுர்க் இன்று சிறப்பாக ஆடினார். அவர் 35 பந்துகளில், 4 ஃபோர், 2 சிக்சர்களுடன் 55 ரன் அடித்தார். அணித்தலைவர் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ரன் அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

மீதமுள்ள பனிகளைச் செவ்வனச் செய்து ஸ்டப்ஸும் (15 ரன்) ஷாய் ஹோப்பும் (11 ரன்) 18.1 ஓவரில் 170 ரன் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 

          மும்பை அணியின் குல்தீப் யாதவ் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நாளை முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.  

12.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்54180.871
கொல்கொத்தா43161.528
சென்னை53260.666
லக்னோ53260.436
ஹைதராபாத்53260.344
குஜராத்6336-0.637
மும்பை52340.073
பஞ்சாப்5234-0.196
டெல்லி6244-1.124
பெங்களூரு6152-1.124

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories