சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்க நான் சொல்லவில்லை; சித்தராமையா

பெங்களூர்:

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் வசதிகளைச் செய்து கொடுக்குமாறு நான் எந்த உத்தரவோ அறிவுறுத்தல்களோ ஏடிஜிபிக்கு வழங்கவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா உள்ளிட்டோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை டிஐஜி ரூபா கூறினார். மேலும், இதற்காக சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

DIG Rupa SASIKALA - 2026

இதை அடுத்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி, கர்நாடக அரசிடம் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அதன்படி, சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும்ம், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் அரசு உத்தரவிட்டது.

இதன்படி, சத்திய நாராயண ராவ் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறை அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்புப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை வைத்து, ஊழல் தடுப்பு படை போலீஸார் விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையா கூறியதால்தான், சசிகலாவுக்கு சிறையில் சில சலுகைகளை வழங்கினேன் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி சத்தியநாராயணா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் விதமாக, பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து தருமாறு நான் எதுவும் கூறவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கும் வசதிகள் கூட சசிகலாவிற்கு சிறையில் தரப்படவில்லை என தமிழகத்தில் இருந்து வந்த கடிதத்தின் பேரிலேயே சசிகலாவிற்கு வசதிகள் செய்து தரக் கூறினேன். சட்டத்திற்கு உட்பட்டு சிறையில் சசிகலாவிற்கு வசதிகள் செய்து தருமாறு அறிவுறுத்தினேன்” என்று விளம்மக் அளித்துள்ளார்.

சட்டத்துக்கு உட்பட்டு சிறையில் வசதிகள் செய்து தருமாறு முதல்வர் அறிவுறுத்த வேண்டிய தேவை என்ன? பிரச்னை பெரிதான நிலையில், தன்னை விடுவித்துக் கொள்ளும் விதமாக, சத்யநாராயணா ஏன் முதல்வரை மாட்டி விட்டார். முதல்வர் சித்தராமையா முதலில் ஏன் மௌனம் காத்தார் என்று விடை தெரியாத பல கேள்விகள் பின்னணியில் உள்ளதால், இந்த விவகாரம் பெரிதாகும் என்று கர்நாடக அரசியல் மட்டத்தில் விவாதம் சூடு கிளம்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

Entertainment News

Popular Categories