காங்கிரஸ் ஆட்சியின் நல்ல திட்டங்களை மோடி ஒழித்து வருகிறார்: சோனியா ஆவேசம்!

rahulgandhi sonia - 2026

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை மோடி அரசு ஒழித்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியின் வெற்றி நமது தேசத்தின் வெற்றி என்றார். 40 ஆண்டுகளுக்கு முன் சிக்மங்களூரில் இந்திரா பெற்ற வெற்றி இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது. சவாலான நேரத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல்காந்திக்கு சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட அழைப்பு விடுத்த அவர், ராகுல் காந்தியுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களை மோடி அரசு ஒழித்து வருகிறது என சோனியாகாந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சவாலான நேரத்தில் ராகுல்காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். கர்நாடக தேர்தலில் நாம் செயல்படும் விதம் மாற்று அரசியல் திசைக்கு அழைத்துசெல்லும் என்று பேசினார். சோனியாகாந்தி.

மேலும், 2019 ல் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். 2019 ல் நாட்டை காங்கிரஸ் மீட்டெடுக்கும். இதற்காக இப்போதே திட்டமிட வேண்டும். அதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். அரசியலில் நுழைய நான் விரும்பியதில்லை. ஆனால் சூழ்நிலை என்னை அரசியலுக்கு கொண்டு வந்தது. நான் இரண்டு தலைமுறையாக காங்கிரஸ் தலைவராக இருந்தது பெரும் பாக்கியம்.

ஐமு., கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்களை மோடி அரசு வலுவிழக்க செய்து விட்டது. ஐ.மு.,கூட்டணி திட்டங்களை மோடி மதிக்கவில்லை. மோடி அரசு எதிர்க் கட்சியினரை அழித்து வருகிறது. மீடியாக்களை நசுக்க நினைக்கிறது. மோடி வாக்குறுதிகள் மட்டும் கொடுப்பவராகவே உள்ளார். மோடியின் ஏமாற்று வேலையை தோலுரிப்போம்.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தது. புதிய அத்தியாயம் உருவாகி இருக்கிறது. பெரும் சவால்களை எதிர் கொண்டுள்ளோம். ஊழலற்ற, பழிவாங்கும் அரசியலை ஒழித்து மேக் இன் இந்தியா உருவாக்குவோம். இதற்கு கட்சி தலைவர் ராகுல் தலைமையில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று பேசினார் சோனியா காந்தி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories