காங்கிரஸ் ஆட்சியின் நல்ல திட்டங்களை மோடி ஒழித்து வருகிறார்: சோனியா ஆவேசம்!

Published:

rahulgandhi sonia - 2026

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை மோடி அரசு ஒழித்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியின் வெற்றி நமது தேசத்தின் வெற்றி என்றார். 40 ஆண்டுகளுக்கு முன் சிக்மங்களூரில் இந்திரா பெற்ற வெற்றி இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது. சவாலான நேரத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல்காந்திக்கு சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட அழைப்பு விடுத்த அவர், ராகுல் காந்தியுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களை மோடி அரசு ஒழித்து வருகிறது என சோனியாகாந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சவாலான நேரத்தில் ராகுல்காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். கர்நாடக தேர்தலில் நாம் செயல்படும் விதம் மாற்று அரசியல் திசைக்கு அழைத்துசெல்லும் என்று பேசினார். சோனியாகாந்தி.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

மேலும், 2019 ல் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். 2019 ல் நாட்டை காங்கிரஸ் மீட்டெடுக்கும். இதற்காக இப்போதே திட்டமிட வேண்டும். அதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். அரசியலில் நுழைய நான் விரும்பியதில்லை. ஆனால் சூழ்நிலை என்னை அரசியலுக்கு கொண்டு வந்தது. நான் இரண்டு தலைமுறையாக காங்கிரஸ் தலைவராக இருந்தது பெரும் பாக்கியம்.

ஐமு., கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்களை மோடி அரசு வலுவிழக்க செய்து விட்டது. ஐ.மு.,கூட்டணி திட்டங்களை மோடி மதிக்கவில்லை. மோடி அரசு எதிர்க் கட்சியினரை அழித்து வருகிறது. மீடியாக்களை நசுக்க நினைக்கிறது. மோடி வாக்குறுதிகள் மட்டும் கொடுப்பவராகவே உள்ளார். மோடியின் ஏமாற்று வேலையை தோலுரிப்போம்.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தது. புதிய அத்தியாயம் உருவாகி இருக்கிறது. பெரும் சவால்களை எதிர் கொண்டுள்ளோம். ஊழலற்ற, பழிவாங்கும் அரசியலை ஒழித்து மேக் இன் இந்தியா உருவாக்குவோம். இதற்கு கட்சி தலைவர் ராகுல் தலைமையில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று பேசினார் சோனியா காந்தி.
ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img