புது தில்லி அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் உபேர் டாக்ஸி தனது சேவையை தில்லியில் மீண்டும் துவங்கவுள்ளது. அது, இந்தியாவின் தலைநகரான தில்லியில் தனது சேவையை மீண்டும் துவக்கும் வகையில், ரேடியோ டாக்ஸி உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ளது. முன்னதாக ஒரு பெண் பயணியை உபேர் கேப்ஸ் கார் ஓட்டுநர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து அதன் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.

