என்னது…?! ராகுல் ராஜினாமா கடிதம் கொடுத்தாரா..? அப்படி எல்லாம் இல்லையே!

randeep surjeewala - 2026

ராகுல் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக வெளியான தககலுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. நாடு முழுவதும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது. அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் தோல்வியைத் தழுவியதை காங்கிரஸாரால் ஜீரணிக்க இயலவில்லை!

இதை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற படுதோல்விக்கு காரணம் தேடி, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தில்லியில் கூடியது. இந்தக் கூட்டத்தில் ஐ.மு. கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் சந்தித்த மிகப்பெரிய தோல்விக்கான காரணங்கள், மக்களிடம் காங்கிரஸ் எதைக் கொண்டு சேர்க்கவில்லை, என்ன செய்திருக்க வேண்டும், செய்த தவறுகள் என்ன என்று விவாதிக்கப் பட்டது.

இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராகுல் கடிதம் அளித்துள்ளார் என்றும், அதனை காங்கிரஸ் காரியக் கமிட்டி நிராகரித்து விட்டது என்றும் தகவல்கள் வெளியாயின.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

ராகுல் முடிவை நிராகரித்த காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், ராகுலே காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியிருந்தது. இதனை ஊடகங்கள் பலவும் செய்தியாக வெளியிட்டன.

congress comittee - 2026இந்நிலையில் இந்தத் தகவலில் உண்மையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

ராஜினாமா செய்யத் தேவையில்லை என்றும், கட்சியை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் காரியக் கமிட்டி கூறியதாக தகவல் வெளியானது. அம்பிகா சோனியும் ராகுல் ராஜினாமா குறித்து தகவல் தெரிவித்த போது, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.

தோல்விக்கு ராகுல் காந்தி மட்டும் காரணமில்லை, அதற்கு ஈடாக ஒவ்வொரு பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்களும் காரணம் என்று கூறினார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான். எனவே ராகுல் ராஜினாமா செய்யத் தேவையில்லை என்றார் அவர்.

இருப்பினும் 52 இடங்களை மட்டுமே பெற்று, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் போனது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

rahul resignation - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories