February 22, 2026, 5:14 PM
29 C
Chennai

தாயின் கண்முன் காட்டு யானை தாக்கியதில் சிறுமி பரிதாப பலி….!

ELIBEAND e1558779771979 - 2026

பொள்ளாச்சியை அடுத்துள்ள நவமலை பகுதியில் தாயின் கண்முன்னே காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அருகில் உள்ளது நவமலை   இங்குள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜீ–சித்ரா தம்பதியினா் ராஜீ வேட்டை தடுப்பு காவலராக வேலைபார்த்து வருகிறார்.

ராஜீ-சித்ரா தம்பதியினருக்கு ரஞ்சனா(எ)ரஞ்சனி (வயது) 7 மகள் உள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை சித்ரா தனது மகள் ரஞ்சனியை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு சென்று விட்டு நவமலைக்கு திரும்பி உள்ளார்.

அப்போது இருவரும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனா்.
அப்போது அந்த பகுதியில் திடீரென வந்த காட்டு யானை ஒன்று சித்ராவையும், சிறுமி ரஞ்சனியை துரத்தியது

இதில் அலறியடுத்து கொண்டு ஓடிய சிறுமி ரஞ்சனியை காட்டுயானை தாக்கியது.

இதனால் அலறிய சிறுமி ரஞ்சனியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கம் உள்ளவா்கள் ஓடி வந்துள்ளனா்.

இதனையடுத்து காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.

பின்னர் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த சிறுமி ரஞ்சனியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால் கொண்டு செல்லும் வழியிலே சிறுமி ரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார். தாய் கண்முன்னே காட்டு யானை தாக்கி மகள் இறந்த சம்பவம் அப்பகுதி மலைவாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து இறந்த சிறுமி ரஞ்சனியின் உடல் உடல்கூறு ஆய்வுக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories