தாயின் கண்முன் காட்டு யானை தாக்கியதில் சிறுமி பரிதாப பலி….!

ELIBEAND e1558779771979 - 2026

பொள்ளாச்சியை அடுத்துள்ள நவமலை பகுதியில் தாயின் கண்முன்னே காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அருகில் உள்ளது நவமலை   இங்குள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜீ–சித்ரா தம்பதியினா் ராஜீ வேட்டை தடுப்பு காவலராக வேலைபார்த்து வருகிறார்.

ராஜீ-சித்ரா தம்பதியினருக்கு ரஞ்சனா(எ)ரஞ்சனி (வயது) 7 மகள் உள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை சித்ரா தனது மகள் ரஞ்சனியை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு சென்று விட்டு நவமலைக்கு திரும்பி உள்ளார்.

அப்போது இருவரும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனா்.
அப்போது அந்த பகுதியில் திடீரென வந்த காட்டு யானை ஒன்று சித்ராவையும், சிறுமி ரஞ்சனியை துரத்தியது

இதில் அலறியடுத்து கொண்டு ஓடிய சிறுமி ரஞ்சனியை காட்டுயானை தாக்கியது.

இதனால் அலறிய சிறுமி ரஞ்சனியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கம் உள்ளவா்கள் ஓடி வந்துள்ளனா்.

இதனையடுத்து காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.

பின்னர் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த சிறுமி ரஞ்சனியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால் கொண்டு செல்லும் வழியிலே சிறுமி ரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார். தாய் கண்முன்னே காட்டு யானை தாக்கி மகள் இறந்த சம்பவம் அப்பகுதி மலைவாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து இறந்த சிறுமி ரஞ்சனியின் உடல் உடல்கூறு ஆய்வுக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories