“மோடியை திருடன் என்றதை மக்கள் ஏற்கவில்லை..!” தோல்விக்கான காரணங்களை அடுக்கும் காங்கிரஸ்!

rahul gandhi 24 - 2026நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக., தனித்தே பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் வென்று, ஆட்சி அமைக்கிறது. பாஜக., கூட்டணியோ 350 தொகுதிகளுக்கும் அதிகமாக வென்றுள்ளது.

அதே நேரம் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. ராகுல் தனது பிரசாரத்தின் போது ரபேல் விவகாரத்தை மையப்படுத்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக காவலாளியே திருடன் என்று மோடியைக் குற்றம் சொல்லி சாடினார்.

ஆனால், ராகுலின் இத்தகைய எதிர்மறை விமர்சனங்களை மக்கள் ஏற்கவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன. வெறுமனே குற்றச்சாட்டை மட்டுமே முன்வைத்த ராகுல் காந்தியால், மோடிக்கு எதிராக எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிட முடியவில்லை. ரபேல் விவகாரத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது, ஆனால் அதற்கான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை, தவறு நடந்திருப்பதாக நான் சந்தேகிக்கிறேன் என்று மட்டுமே ராகுலால் சொல்ல முடிந்தது.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

மேலும், ராகுலின் நடவடிக்கைகள் சிறுபிள்ளைத் தனமாக இருந்ததாக காங்கிரஸார் பலரும் இப்போது புலம்பி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைக் கட்டிப் பிடித்தது, பின்னர் அடுத்து இருப்பரைப் பார்த்து கண்ணசைத்தது என்றெல்லாம் குழந்தைத் தனமான செயல்களைப் பார்த்து நாடே சிரித்தது!

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் இது குறித்து கூறும் போது, ராகுல் காந்தியின் “காவலாளி ஒரு திருடன்” என்ற நரேந்திர மோடி மீதான கருத்து எதிர்மறை வினையை எற்படுத்திவிட்டது. மோடியை திருடன் என்று சொன்னதை மக்கள் ஏற்கவில்லை!

மேலும் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நிகழ்வுகளின் போது காங்கிரஸ் தலைமை அதனை சரியாகக் கையாளாமல், நாட்டின் ஒட்டுமொத்த மனநிலைக்கு எதிரான எதிர்த்திசையில் பயணித்தது. காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகள், ராணுவத்தை விமர்சனம் செய்வதாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பயங்கராதிகளுக்கு ஆதரவாகவும் மாறியது போன்ற மனநிலையில் மக்கள் இருந்தனர்.

பயங்கரவாத இயக்கத் தலைவன் மௌலானா மசூத் அசாரை, மசூத் அசார் ஜீ என்று மதிப்பும் மரியாதையும் மிக்கவராக ராகுல் வெளிப்படுத்தியதைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. இவற்றை இளம் தலைமுறையினர் வெறுப்புடன் பார்த்தனர்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மேலும், குடும்ப அரசியலை இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பவில்லை
என்றெல்லாம் தோல்விக்கான காரணங்களை அடுக்குகின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories