“மோடியை திருடன் என்றதை மக்கள் ஏற்கவில்லை..!” தோல்விக்கான காரணங்களை அடுக்கும் காங்கிரஸ்!

rahul gandhi 24 - 2026நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக., தனித்தே பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் வென்று, ஆட்சி அமைக்கிறது. பாஜக., கூட்டணியோ 350 தொகுதிகளுக்கும் அதிகமாக வென்றுள்ளது.

அதே நேரம் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. ராகுல் தனது பிரசாரத்தின் போது ரபேல் விவகாரத்தை மையப்படுத்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக காவலாளியே திருடன் என்று மோடியைக் குற்றம் சொல்லி சாடினார்.

ஆனால், ராகுலின் இத்தகைய எதிர்மறை விமர்சனங்களை மக்கள் ஏற்கவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன. வெறுமனே குற்றச்சாட்டை மட்டுமே முன்வைத்த ராகுல் காந்தியால், மோடிக்கு எதிராக எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிட முடியவில்லை. ரபேல் விவகாரத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது, ஆனால் அதற்கான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை, தவறு நடந்திருப்பதாக நான் சந்தேகிக்கிறேன் என்று மட்டுமே ராகுலால் சொல்ல முடிந்தது.

மேலும், ராகுலின் நடவடிக்கைகள் சிறுபிள்ளைத் தனமாக இருந்ததாக காங்கிரஸார் பலரும் இப்போது புலம்பி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைக் கட்டிப் பிடித்தது, பின்னர் அடுத்து இருப்பரைப் பார்த்து கண்ணசைத்தது என்றெல்லாம் குழந்தைத் தனமான செயல்களைப் பார்த்து நாடே சிரித்தது!

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் இது குறித்து கூறும் போது, ராகுல் காந்தியின் “காவலாளி ஒரு திருடன்” என்ற நரேந்திர மோடி மீதான கருத்து எதிர்மறை வினையை எற்படுத்திவிட்டது. மோடியை திருடன் என்று சொன்னதை மக்கள் ஏற்கவில்லை!

மேலும் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நிகழ்வுகளின் போது காங்கிரஸ் தலைமை அதனை சரியாகக் கையாளாமல், நாட்டின் ஒட்டுமொத்த மனநிலைக்கு எதிரான எதிர்த்திசையில் பயணித்தது. காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகள், ராணுவத்தை விமர்சனம் செய்வதாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பயங்கராதிகளுக்கு ஆதரவாகவும் மாறியது போன்ற மனநிலையில் மக்கள் இருந்தனர்.

பயங்கரவாத இயக்கத் தலைவன் மௌலானா மசூத் அசாரை, மசூத் அசார் ஜீ என்று மதிப்பும் மரியாதையும் மிக்கவராக ராகுல் வெளிப்படுத்தியதைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. இவற்றை இளம் தலைமுறையினர் வெறுப்புடன் பார்த்தனர்.

மேலும், குடும்ப அரசியலை இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பவில்லை
என்றெல்லாம் தோல்விக்கான காரணங்களை அடுக்குகின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories