கர்நாடகாவில் ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. 2.5 கிலோ தங்கம், 19 லிட்டர் மதுபானத்தையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம், தங்கம், மதுபானம் கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகம் அடைந்து சோதனை நடைபெற்றது.