காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்களும் பேசி முடிவெடுக்கவே பிரதமர் விரும்புகிறார்: முரளிதர் ராவ்

Published:

சென்னை:
பாஜக., வின் கூட்டம் நேற்று சென்னையில் கமலாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ்,

காவிரி நதிநீர் பிரச்னை நாட்டின் ஒற்றுமை சார்ந்த விஷயம். இதனை குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு இரு மாநில முதல்வர்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என்றார்.

மேலும், இலங்கை பிரச்னையில் தமிழர் நலனுக்காக ராஜதந்திரத்துடனும், நாட்டின் பாதுகாப்பு சார்ந்தும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்னையில் தமிழர்களுக்கு பாதிப்பு இல்லாமலும், இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு நல்ல முறையில் முடிவு எடுப்போம் என்று கூறினார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img