சென்னை:
பாஜக., வின் கூட்டம் நேற்று சென்னையில் கமலாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ்,
காவிரி நதிநீர் பிரச்னை நாட்டின் ஒற்றுமை சார்ந்த விஷயம். இதனை குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு இரு மாநில முதல்வர்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என்றார்.
மேலும், இலங்கை பிரச்னையில் தமிழர் நலனுக்காக ராஜதந்திரத்துடனும், நாட்டின் பாதுகாப்பு சார்ந்தும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்னையில் தமிழர்களுக்கு பாதிப்பு இல்லாமலும், இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு நல்ல முறையில் முடிவு எடுப்போம் என்று கூறினார்.


