வாட்ஸ்அப், ஹேங்க்அவுட் தகவல்களை 90 நாட்களுக்குள் அழித்தால் குற்றம்: மத்திய அரசின் புதிய சட்டம்

புது தில்லி:

வாட்ஸ் ஆப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் உள்ளிட்டவற்றில் பரிமாறப்படும் தகவல்களை 3 மாதங்கள் வரை அழிக்கக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை மீறினால் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

சமூக தகவல் தளங்களான இந்த வழிகளில் வரும் தகவல்கள் குறியீட்டுச் சொற்களாக மாற்றப்பட்டு வருவதே இதற்கு முக்கியக் காரணம். வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றில் நாம் அனுப்பும் செய்திகள் தானாகவே குறியீட்டுச் சொற்களாக மாற்றப்பட்டு அனுப்பப்படுகின்றன. அவற்றைப் பெறுபவர்களின் ஸ்மார்ட் போனில் மட்டுமே நாம் அனுப்பும் தகவலை படிக்க முடியும்.

இப்போது தேசிய குறியீட்டுச் சொற்கள் வரைவுச் சட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது அமல்படுத்தப்பட்டால், அனைவரும் தங்கள் வாட்ஸ் ஆப், ஹேங் அவுட்ஸ், ஐமெசேஜ் உள்ளிட்டவற்றை 3 மாதங்கள் வரை கண்டிப்பாக அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் படும்..

இந்தப் புதிய சட்டத்தின்படி பொதுமக்களுக்கு இணையம் மூலம் தகவல்களைப் பரிமாறுவதிலும் தகவல்களை கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றில் பதிவு செய்து வைப்பதிலும் குறியீட்டுச் சொற்கள் வசதியை பயன்படுத்த உரிமை உண்டு. அதே நேரத்தில் அதற்கான செயல்முறையை முக்கியமாக அல்காரிதம் வடிவமைப்பு, “கீ சைஸ்” உள்ளிட்டவற்றை அரசின் அப்போதைய அறிவிப்பின்படி செயல்படுத்த வேண்டும். இதன்படி கூகுள், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தியாவில் மத்திய அரசு கூறும் குறியீட்டு சொல் வடிவமைப்பு முறையையே பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த வசதியைப் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் ஸ்மார்ட்போனில் பெறும் தகவல்கள், அனுப்பும் தகவல்களை கண்டிப்பாக 3 மாதங்கள் வரை அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிருக்கும்.

இந்தப் புதிய சட்டத்தை இணையத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு இது தொடர்பாக தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories