வாட்ஸ்அப், ஹேங்க்அவுட் தகவல்களை 90 நாட்களுக்குள் அழித்தால் குற்றம்: மத்திய அரசின் புதிய சட்டம்

Published:

புது தில்லி:

வாட்ஸ் ஆப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் உள்ளிட்டவற்றில் பரிமாறப்படும் தகவல்களை 3 மாதங்கள் வரை அழிக்கக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை மீறினால் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

சமூக தகவல் தளங்களான இந்த வழிகளில் வரும் தகவல்கள் குறியீட்டுச் சொற்களாக மாற்றப்பட்டு வருவதே இதற்கு முக்கியக் காரணம். வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றில் நாம் அனுப்பும் செய்திகள் தானாகவே குறியீட்டுச் சொற்களாக மாற்றப்பட்டு அனுப்பப்படுகின்றன. அவற்றைப் பெறுபவர்களின் ஸ்மார்ட் போனில் மட்டுமே நாம் அனுப்பும் தகவலை படிக்க முடியும்.

இப்போது தேசிய குறியீட்டுச் சொற்கள் வரைவுச் சட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது அமல்படுத்தப்பட்டால், அனைவரும் தங்கள் வாட்ஸ் ஆப், ஹேங் அவுட்ஸ், ஐமெசேஜ் உள்ளிட்டவற்றை 3 மாதங்கள் வரை கண்டிப்பாக அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் படும்..

இந்தப் புதிய சட்டத்தின்படி பொதுமக்களுக்கு இணையம் மூலம் தகவல்களைப் பரிமாறுவதிலும் தகவல்களை கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றில் பதிவு செய்து வைப்பதிலும் குறியீட்டுச் சொற்கள் வசதியை பயன்படுத்த உரிமை உண்டு. அதே நேரத்தில் அதற்கான செயல்முறையை முக்கியமாக அல்காரிதம் வடிவமைப்பு, “கீ சைஸ்” உள்ளிட்டவற்றை அரசின் அப்போதைய அறிவிப்பின்படி செயல்படுத்த வேண்டும். இதன்படி கூகுள், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தியாவில் மத்திய அரசு கூறும் குறியீட்டு சொல் வடிவமைப்பு முறையையே பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த வசதியைப் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் ஸ்மார்ட்போனில் பெறும் தகவல்கள், அனுப்பும் தகவல்களை கண்டிப்பாக 3 மாதங்கள் வரை அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிருக்கும்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இந்தப் புதிய சட்டத்தை இணையத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு இது தொடர்பாக தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img