நீதிமன்ற உத்தரவை அடுத்து மாயமான ஹர்திக் படேல் சௌராஷ்ட்டிராவில் சிக்கினார்

ஆமதாபாத்:

குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஹர்திக் படேல், இன்று சௌராஷ்டிரா பகுதியில் குஜாராத் மாநில போலீசார் வசம் சிக்கினார்.

குஜராத் மாநிலத்தில் வாழும் படேல் சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அண்மைக் காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தப் போராட்டத்துக்கு ஹர்திக் படேல்(22) என்ற இளைஞர் தலைமை தாங்கி வருகிறார். கடந்த 25 ஆம் தேதி ஆமதாபாத்தில் இவர்களின் பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் குஜராத் மாநிலத்தில் பல நாட்களுக்கு பதற்றம் நிலவியது. இதே கோரிக்கையுடன் ஹர்திக் படேல் தலைமையில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று ஹர்திக் படேல் ஆமதாபாத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள, அர்வாலி மாவட்டம் டெயின்பூர் என்ற இடத்தில் உரிய போலீஸ் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தினார். அங்கே கூடியிருந்த சுமார் 2 ஆயிரம் பேர் மத்தியில் நின்று பேசினார். அவர் பேசி முடித்து அங்கிருந்து புறப்பட்டபோது, அவரை மீண்டும் கைது செய்ய போலீசார் காத்திருந்தனர். ஆனால் அவர் எவர் கையிலும் அகப்படாமல், ரகசியமாக தனது வாகன அணி வகுப்பில் இடம்பெற்றிருந்த கார் ஒன்றில் ஏறி தப்பினார். அவருடன் அவரது இயக்கத்தின் முன்னணித் தலைவர்களும் தப்பினர்.

இந்நிலையில், ஹர்திக் பட்டேலை போலீசார் சட்டவிரோதமாகக் கைது செய்து, ரகசிய இடத்தில் அடைத்து வைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர். இதையடுத்து, ‘பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ இயக்கத்தின் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆள்கொணர்வு மனுவில், ஹர்திக் படேலை போலீசார் சட்ட விரோதமாகக் கைது செய்துள்ளனர். அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை, அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என குஜராத் உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் கோரப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை 1.20 இல் இருந்து 2.40வரை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கே.ஜே. தாக்கூர் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, ஹர்திக் படேல் எங்கே உள்ளார்? என உடனடியாக கண்டுபிடிக்கும்படி குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் உடனடியாக ஹர்திக் பட்டேலை கண்டுபிடிக்குமாறும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்த  விவகாரம் தொடர்பாக நாளை 24ம் தேதிக்குள் அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், மீண்டும் அன்றைய தினம் விசாரணை நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், குஜராத்தின் சௌராஷ்ட்டிரா பகுதியில் ஹர்திக் பட்டேல் தங்கியுள்ளதாக குஜராத் போலீசாருக்கு ஹர்திக் பட்டேலின் வக்கீல் மூலம் தகவல் கிடைத்தது.  இதை அடுத்து அவரை அங்கிருந்து அழைத்துவந்து உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories