பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Asaram Bapu - 2026

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இன்று நீதிம்ரதிற்கு ஆஜராக வந்த அஸ்ராம் பாபு 15 நிமிடம் தாமதமாக வந்ததோடு, தான் பூஜை நடத்தி விட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த அசராம் பாபுவும், இவருடைய மகன் நாராயணனும் ஆசிரமத்தில் தங்கியிருந்த குஜராத் சகோதரிகள் இருவர் மற்றும் உத்தரபிரதேச சிறுமி ஆகியோரை பாலியியல் பலாத்காரம் செய்ததாக கூறி, கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

யார் இந்த அஸ்ராம் பாபு:

அஸ்ராம் பாபுவின் இயற்பெயர் அசுமல் சிர்மலனி. ஏகபட்ட பக்தர்களை கொண்டுள்ள அஸ்ராம் பாபு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 400 ஆஸ்ரமங்களை நிறுவியுள்ளார். அவரது சுய சரிதை ‘அஸ்ராம் பாபுஜி கி ஜீவன் ஜஹங்கி’ என்ற பெயரில் அவரது ஆசிரமத்தால் வெளியிட்டப்பட்டது. தனது தந்தை உயிருடன் இருந்தவரை தனது பள்ளி படிப்பை மூன்றாம் வகுப்பு வரை படித்த அஸ்ராம், தந்தை மறைவுக்கு பின்னர் பல்வேறு ஆஸ்ரமங்களில் வசதித்து வந்தார். தனது 15 வயதில் ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறினார்.

ஆன்மீக குருவாக மாறிய இவர், 1964ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல் அஸ்ராம் பாபு என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

இவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள்:

77 வயதான அஸ்ராம் பாபு, ஜோத்பூரில் 16 சிறுமி ஒருவரை கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாக போஸ்கோ (Protection of Children from Sexual Offences -POCSO) குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி டெல்லியின் கமலா நகர் போலீஸ் ஸ்டேஷனில் இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் இவரை மருத்துவ பரிசோதனிக்கு அழைத்து சென்றனர். 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அஸ்ராம் பாபு கைது செய்யப்பட்டர்.

இவர் மீது ஐபிசி சட்டம் 342, 376, 354 A, 506, 509/34 , 23, 26 பிரிவு போஸ்கோ (Protection of Children from Sexual Offences -POCSO) சட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, அவர் மீது பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு மற்றும் சிறுமியை சட்ட விரோதமாக கட்டுபாட்டி வைத்திருந்தது ஆகிய குற்றங்கள் அடங்கிய 1,300 பக்க குற்றப் பத்திரிகையை ராஜஸ்தான் போலீசார் பதிவு செய்தனர்.

இது மட்டுமின்றி மேலும் இரண்டு பாலியல் வழக்குகளும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories