பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Asaram Bapu - 2026

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இன்று நீதிம்ரதிற்கு ஆஜராக வந்த அஸ்ராம் பாபு 15 நிமிடம் தாமதமாக வந்ததோடு, தான் பூஜை நடத்தி விட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த அசராம் பாபுவும், இவருடைய மகன் நாராயணனும் ஆசிரமத்தில் தங்கியிருந்த குஜராத் சகோதரிகள் இருவர் மற்றும் உத்தரபிரதேச சிறுமி ஆகியோரை பாலியியல் பலாத்காரம் செய்ததாக கூறி, கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

யார் இந்த அஸ்ராம் பாபு:

அஸ்ராம் பாபுவின் இயற்பெயர் அசுமல் சிர்மலனி. ஏகபட்ட பக்தர்களை கொண்டுள்ள அஸ்ராம் பாபு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 400 ஆஸ்ரமங்களை நிறுவியுள்ளார். அவரது சுய சரிதை ‘அஸ்ராம் பாபுஜி கி ஜீவன் ஜஹங்கி’ என்ற பெயரில் அவரது ஆசிரமத்தால் வெளியிட்டப்பட்டது. தனது தந்தை உயிருடன் இருந்தவரை தனது பள்ளி படிப்பை மூன்றாம் வகுப்பு வரை படித்த அஸ்ராம், தந்தை மறைவுக்கு பின்னர் பல்வேறு ஆஸ்ரமங்களில் வசதித்து வந்தார். தனது 15 வயதில் ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறினார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

ஆன்மீக குருவாக மாறிய இவர், 1964ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல் அஸ்ராம் பாபு என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

இவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள்:

77 வயதான அஸ்ராம் பாபு, ஜோத்பூரில் 16 சிறுமி ஒருவரை கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாக போஸ்கோ (Protection of Children from Sexual Offences -POCSO) குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி டெல்லியின் கமலா நகர் போலீஸ் ஸ்டேஷனில் இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் இவரை மருத்துவ பரிசோதனிக்கு அழைத்து சென்றனர். 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அஸ்ராம் பாபு கைது செய்யப்பட்டர்.

இவர் மீது ஐபிசி சட்டம் 342, 376, 354 A, 506, 509/34 , 23, 26 பிரிவு போஸ்கோ (Protection of Children from Sexual Offences -POCSO) சட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, அவர் மீது பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு மற்றும் சிறுமியை சட்ட விரோதமாக கட்டுபாட்டி வைத்திருந்தது ஆகிய குற்றங்கள் அடங்கிய 1,300 பக்க குற்றப் பத்திரிகையை ராஜஸ்தான் போலீசார் பதிவு செய்தனர்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

இது மட்டுமின்றி மேலும் இரண்டு பாலியல் வழக்குகளும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories