இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் வீடு மற்றும் தில்லியில் உள்ள அவருக்கு சொந்தமான 11 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்து வருகிறது. அதன் முதல்வராக இருக்கும் வீரபத்ர சிங் மீது சொத்து சேர்ப்பு புகார்கள் குவிந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை முதல் தில்லி மற்றும் இமாச்சல் பிரதேசம் உடபட 11 இடங்களில் சோதனை நடத்தினர்.
வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங், மகன் விக்ரமாதித்ய சிங் மற்றும் மகள் அபரஜிடா சிங் ஆகியோரிடம் விசாரனை நடத்தப்பட்டன. வீரபத்ர சிங்குக்கு சொந்தமான இடங்களில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரின் தனிச் செயலாளரிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த சோதனையின் போது முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கே இல்லை. வீரபத்ர சிங்கின் மகள் திருமண நிகழ்ச்சிக்காக அவர்கள் சிம்லாவில் உள்ள கோவிலுக்குச் சென்றிருந்னராம். மாநில மூத்த அமைச்சர் ஒருவர் தகவலறிந்து அங்கு விரைந்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரசாந்த் பூஷன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


