இமாச்சல் முதல்வர் மீது ஊழல் வழக்கு பதிவு: சி.பி.ஐ. சோதனை

Published:

இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் வீடு மற்றும் தில்லியில் உள்ள அவருக்கு சொந்தமான 11 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்து வருகிறது. அதன் முதல்வராக இருக்கும் வீரபத்ர சிங் மீது சொத்து சேர்ப்பு புகார்கள் குவிந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை முதல் தில்லி மற்றும் இமாச்சல் பிரதேசம் உடபட 11 இடங்களில் சோதனை நடத்தினர்.

வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங், மகன் விக்ரமாதித்ய சிங் மற்றும் மகள் அபரஜிடா சிங் ஆகியோரிடம் விசாரனை நடத்தப்பட்டன. வீரபத்ர சிங்குக்கு சொந்தமான இடங்களில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரின் தனிச் செயலாளரிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த சோதனையின் போது முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கே இல்லை. வீரபத்ர சிங்கின் மகள் திருமண நிகழ்ச்சிக்காக அவர்கள் சிம்லாவில் உள்ள கோவிலுக்குச் சென்றிருந்னராம். மாநில மூத்த அமைச்சர் ஒருவர் தகவலறிந்து அங்கு விரைந்துள்ளார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரசாந்த் பூஷன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img