‘ராமாயண’ சுற்று நம்மை இணைக்கும்! இரு நாட்டு மக்களின் நேரடி தொடர்புக்கு அடித்தளம்!: நேபாளத்தில் மோடி பேச்சு!

janakapuri modi bus service - 2026

காத்மண்டு: நேபாளத்தின் ஜானக்பூர் மற்றும் உ.பி., யின் அயோத்தி இடையிலான பஸ் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் சர்மா ஒலி இருவரும் இணைந்து துவக்கி வைத்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ராமாயண சர்க்யுட் இரு நாட்டு மக்களையும் நேரடியாக இணைத்து வைக்கும் என்று பெருமிதம் பொங்க குறிப்பிட்டார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று காலை நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்குச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஜனகபுரி எனப்படும் ஜனக்புர் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ஜானகி கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் நேபாள பிரதமர் ஒலி உடன் சென்றார். பின் இருவரும் இணைந்து ஜனக்புர்- அயோத்தி பஸ் சேவையை துவக்கி வைத்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இரு நாடுகளுக்கு இடையிலான பஸ் சேவையை துவக்கி வைப்பது பெருமை அளிக்கிறது. இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவு மேம்படும்.

இந்திய நேபாள உறவு என்பது, திரேதா யுகத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது மாமன்னர் ஜனகரும் மாமன்னர் தசரதரும் அயோத்தியையும் ஜனகபுரியையும் மட்டும் இணைத்தார்களில்லை, இந்திய – நேபாள உறவையும் வலுப்படுத்தி இணைத்து வைத்துள்ளார்கள்.

இரு நாட்டு மக்களும் நேரடியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இது, இரு நாட்டு சுற்றுலா வளர்ச்சியிலும் முக்கையப் பங்கு வகிக்கும். இந்தியா நேபாளம் இரு ந்நாடுகளும் ராமாயண் சுற்று என்பதை கட்டமைத்து வளர்க்க வேண்டும். அதற்கான அடித்தளம் இது என்று கூறினார்.

நேபாள பிரதமர் சர்மா ஒலி கூறுகையில், நேபாளத்துடனான உறவை வலுப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்தியா உதவியுடன் நேபாளத்தில் ஹைட்ரோ எலெக்ட்ரிக் திட்டம் அமைக்கப் படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories