December 5, 2025, 2:32 PM
26.9 C
Chennai

‘ராமாயண’ சுற்று நம்மை இணைக்கும்! இரு நாட்டு மக்களின் நேரடி தொடர்புக்கு அடித்தளம்!: நேபாளத்தில் மோடி பேச்சு!

janakapuri modi bus service - 2025

காத்மண்டு: நேபாளத்தின் ஜானக்பூர் மற்றும் உ.பி., யின் அயோத்தி இடையிலான பஸ் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் சர்மா ஒலி இருவரும் இணைந்து துவக்கி வைத்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ராமாயண சர்க்யுட் இரு நாட்டு மக்களையும் நேரடியாக இணைத்து வைக்கும் என்று பெருமிதம் பொங்க குறிப்பிட்டார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று காலை நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்குச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஜனகபுரி எனப்படும் ஜனக்புர் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ஜானகி கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் நேபாள பிரதமர் ஒலி உடன் சென்றார். பின் இருவரும் இணைந்து ஜனக்புர்- அயோத்தி பஸ் சேவையை துவக்கி வைத்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இரு நாடுகளுக்கு இடையிலான பஸ் சேவையை துவக்கி வைப்பது பெருமை அளிக்கிறது. இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவு மேம்படும்.

இந்திய நேபாள உறவு என்பது, திரேதா யுகத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது மாமன்னர் ஜனகரும் மாமன்னர் தசரதரும் அயோத்தியையும் ஜனகபுரியையும் மட்டும் இணைத்தார்களில்லை, இந்திய – நேபாள உறவையும் வலுப்படுத்தி இணைத்து வைத்துள்ளார்கள்.

இரு நாட்டு மக்களும் நேரடியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இது, இரு நாட்டு சுற்றுலா வளர்ச்சியிலும் முக்கையப் பங்கு வகிக்கும். இந்தியா நேபாளம் இரு ந்நாடுகளும் ராமாயண் சுற்று என்பதை கட்டமைத்து வளர்க்க வேண்டும். அதற்கான அடித்தளம் இது என்று கூறினார்.

நேபாள பிரதமர் சர்மா ஒலி கூறுகையில், நேபாளத்துடனான உறவை வலுப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்தியா உதவியுடன் நேபாளத்தில் ஹைட்ரோ எலெக்ட்ரிக் திட்டம் அமைக்கப் படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories