‘ராமாயண’ சுற்று நம்மை இணைக்கும்! இரு நாட்டு மக்களின் நேரடி தொடர்புக்கு அடித்தளம்!: நேபாளத்தில் மோடி பேச்சு!

janakapuri modi bus service - 2026

காத்மண்டு: நேபாளத்தின் ஜானக்பூர் மற்றும் உ.பி., யின் அயோத்தி இடையிலான பஸ் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் சர்மா ஒலி இருவரும் இணைந்து துவக்கி வைத்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ராமாயண சர்க்யுட் இரு நாட்டு மக்களையும் நேரடியாக இணைத்து வைக்கும் என்று பெருமிதம் பொங்க குறிப்பிட்டார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று காலை நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்குச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஜனகபுரி எனப்படும் ஜனக்புர் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ஜானகி கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் நேபாள பிரதமர் ஒலி உடன் சென்றார். பின் இருவரும் இணைந்து ஜனக்புர்- அயோத்தி பஸ் சேவையை துவக்கி வைத்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இரு நாடுகளுக்கு இடையிலான பஸ் சேவையை துவக்கி வைப்பது பெருமை அளிக்கிறது. இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவு மேம்படும்.

இந்திய நேபாள உறவு என்பது, திரேதா யுகத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது மாமன்னர் ஜனகரும் மாமன்னர் தசரதரும் அயோத்தியையும் ஜனகபுரியையும் மட்டும் இணைத்தார்களில்லை, இந்திய – நேபாள உறவையும் வலுப்படுத்தி இணைத்து வைத்துள்ளார்கள்.

இரு நாட்டு மக்களும் நேரடியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இது, இரு நாட்டு சுற்றுலா வளர்ச்சியிலும் முக்கையப் பங்கு வகிக்கும். இந்தியா நேபாளம் இரு ந்நாடுகளும் ராமாயண் சுற்று என்பதை கட்டமைத்து வளர்க்க வேண்டும். அதற்கான அடித்தளம் இது என்று கூறினார்.

நேபாள பிரதமர் சர்மா ஒலி கூறுகையில், நேபாளத்துடனான உறவை வலுப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்தியா உதவியுடன் நேபாளத்தில் ஹைட்ரோ எலெக்ட்ரிக் திட்டம் அமைக்கப் படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories