December 5, 2025, 5:20 PM
27.9 C
Chennai

கிரண்பேடி Vs நாராயணசாமி; பத்து நிமிடத்துக்கு பகையை மறக்க வைத்த கம்பன் விழா!

narayanasamy kiranbedi - 2025


புதுச்சேரியில் இரு துருவங்களாகத் திகழும் ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி இருவரும் ஓர் இலக்கிய விழாவில் சந்தித்ததால் பரபரப்பு நிலவியது. ஒரே மேடையில் வேறு நின்றதால் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

திடீரென ஆளுநர் கிரண்பேடி கேட்டுக் கொண்டதற்கிணங்க, கிரண்பேடியின் உரையை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார் முதல்வர் நாராயணசாமி.
#KiranBedi #Narayanasamy #Puducherry #KiranBediVsNarayanasamy


புதுச்சேரி கம்பன் விழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையை, தமிழில் மொழி பெயர்ப்பு செய்த புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்தார் கிரண்பேடி.

புதுச்சேரி கம்பன் கழகத்தின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் 53வது கம்பன் விழா இன்று தொடங்கியது. விழாவை புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடக்கி வைத்தார். இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இலங்கை அமைச்சர் வி.எஸ்.ராதாகிருஷ்ணன், ஐதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி. ராமசுப்ரமணியன் உட்பட, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கம்ப ராமாயணப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மற்றும் ஆளுநர் சார்பில் தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த விழாவில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தான் பேசும்போது, தனது ஆங்கில உரையை மொழிபெயர்க்க, முதலில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனை அழைத்தார். அவரோ, தன்னால் இயன்றவரை மொழிபெயர்த்துக் கூறுவதாக சற்று தயங்கித் தயங்கிச் சொன்னதும், கிரண் பேடி சற்றும் தயங்காமல், முதலமைச்சர் நாராயணசாமியிடம் தனது பேச்சை தமிழாக்கிச் சொல்லுமாறு கூறி அழைத்தார்.

இதனை அங்கே கூடியிருந்தவர்கள் வெகு ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். காரணம், புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் ஏழாம் பொருத்தம்தான்! பல விஷயங்களிலும் ஏறுக்கு மாறாக ஏட்டிக்குப் போட்டியாக பேச்சிலும் நடத்தையிலும் உர் என்று இருக்கும் நிலையில், திடீரென பகை மறந்து கிரண்பேடி அழைத்தபோது ஆச்சரியம் வராமல் எப்படி இருக்கும்?

நிகழ்ச்சியில் கூடியிருந்தோர் பலமாக கைதட்டத் தொடங்கினர். இதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி ஆளுநரின் உரையை மொழிபெயர்த்துச் சொன்னார். அப்போது பேசிய ஆளுநர், அடுத்த 10 நிமிடத்துக்கு உங்களுடன் நட்பு முறையில் இருக்க விரும்புகிறேன் என்றார். பதிலுக்கு நாராயணசாமியும், ’நானும் அந்த நிமிடம் வரை மட்டுமே நட்புடன் இருக்க விரும்புகிறேன்’ என்றார். இருப்பினும் சமாளித்த கிரண்பேடி, ’ஆனால் இந்த நட்பு முறை, காலம் முழுவதும் தொடரட்டும்’ என கூறிக் கொண்டு பேச்சைத் தொடங்கினார். அவரது பேச்சை நாராயண சாமி மொழிபெயர்த்தார். இப்படி, தனது பேச்சை முதல் முதலாக மொழிபெயர்த்துச் சொன்ன நாராயணசாமிக்கு கிரண்பேடி மேடையிலேயே நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இலக்கியம் பகையை மறக்க வைத்தது என்று இந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து அங்கே கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால், ஆளுநர் பேச்சை முதல்வர் நாராயணசாமி மொழிபெயர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் விழா அரங்கில் இருந்து வெளியேறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories