உபரி நீரை திறந்துவிட்ட குமாரசாமிக்கு போன் போட்டு நன்றி சொன்ன கமல்! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

kamal kumarasamy1 - 2026

கர்நாடகத்தில் மழைக் காலம் தொடங்கிவிட்டது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிகம் மழை பெய்து கபினி அணை நிரம்பும் நிலைக்கு வந்துவிட்டது. இந்நிலையில், அணையை காப்பாற்றும் பொருட்டு, அதில் இருந்து உபரி நீரை நேற்று திறந்துவிட்டது கர்நாடக அரசு.

இது குறித்து அறிந்ததும், நடிகர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் நன்றி தெரிவித்ததாக டிவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில், கர்நாடக முதல்வரிடம் தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்ததாகவும், காவிரி ஆணையம் செயல்பட தொடங்கினாலும், இரு மாநிலங்களுக்கு இடையே நல்லுணர்வு அவசியம் என்றும் கூறியிருந்தார்.

 

அவரது கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழகத்தில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று, உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி, மத்திய அரசும் ஒருவழியாக களத்தில் இறங்கி வெகுகாலமாக தீர்க்கப் படாமல் உள்ள பிரச்னைக்கு தீர்வு கண்டு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் பட்ட பிறகு, பழைய பாணியில் காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேசினேன் என்று கமல் கூறியபோது, தமிழகத்தில் பல உள்ளங்கள் கொதித்தெழுந்தன.

இப்போது மீண்டும் அதே பாணியில், கர்நாடக முதல்வருக்கு நன்றி தெரிவித்ததாக கமல் பதிவிட்டதைக் கண்டு பலரும் கொதித்துப் போயுள்ளனர்.

இதன் தாக்கம், சமூக ஊடகங்களில் பரவலாக வெளிப்படுகிறது.

* தண்ணீரே திறந்துவிட்டாலும் அவரிடம் பேச என்ன இருக்கிறது.அவரென்ன நமக்கு பிச்சையா போட்டார். நம் உரிமை…..அதுவும் தானாய் திறந்த தண்ணீருக்கு அவரிடம் எதற்கு பேசவேண்டும்? @SURESH_SANAGAM
Replying to @cinemapudhar @ikamalhaasan @CMofKarnataka

* இதே தண்ணீரை ஒரு மாதத்திற்கு முன்பு திறந்துவிட்டிருந்தால் பாராட்டென்ன பாராட்டுவிழாவே எடுத்திருக்கலாம்…..இன்று தானாய் வந்த தண்ணீருக்கெல்லாம் அவரிடம் பேசினால் உரிமைக்கான தண்ணீர் பெற அவரிடம் அழ வேண்டியிருந்தாலும் இருக்கோமோ? – என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories