உபரி நீரை திறந்துவிட்ட குமாரசாமிக்கு போன் போட்டு நன்றி சொன்ன கமல்! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

kamal kumarasamy1 - 2026

கர்நாடகத்தில் மழைக் காலம் தொடங்கிவிட்டது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிகம் மழை பெய்து கபினி அணை நிரம்பும் நிலைக்கு வந்துவிட்டது. இந்நிலையில், அணையை காப்பாற்றும் பொருட்டு, அதில் இருந்து உபரி நீரை நேற்று திறந்துவிட்டது கர்நாடக அரசு.

இது குறித்து அறிந்ததும், நடிகர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் நன்றி தெரிவித்ததாக டிவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில், கர்நாடக முதல்வரிடம் தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்ததாகவும், காவிரி ஆணையம் செயல்பட தொடங்கினாலும், இரு மாநிலங்களுக்கு இடையே நல்லுணர்வு அவசியம் என்றும் கூறியிருந்தார்.

 

அவரது கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழகத்தில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று, உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி, மத்திய அரசும் ஒருவழியாக களத்தில் இறங்கி வெகுகாலமாக தீர்க்கப் படாமல் உள்ள பிரச்னைக்கு தீர்வு கண்டு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் பட்ட பிறகு, பழைய பாணியில் காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேசினேன் என்று கமல் கூறியபோது, தமிழகத்தில் பல உள்ளங்கள் கொதித்தெழுந்தன.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

இப்போது மீண்டும் அதே பாணியில், கர்நாடக முதல்வருக்கு நன்றி தெரிவித்ததாக கமல் பதிவிட்டதைக் கண்டு பலரும் கொதித்துப் போயுள்ளனர்.

இதன் தாக்கம், சமூக ஊடகங்களில் பரவலாக வெளிப்படுகிறது.

* தண்ணீரே திறந்துவிட்டாலும் அவரிடம் பேச என்ன இருக்கிறது.அவரென்ன நமக்கு பிச்சையா போட்டார். நம் உரிமை…..அதுவும் தானாய் திறந்த தண்ணீருக்கு அவரிடம் எதற்கு பேசவேண்டும்? @SURESH_SANAGAM
Replying to @cinemapudhar @ikamalhaasan @CMofKarnataka

* இதே தண்ணீரை ஒரு மாதத்திற்கு முன்பு திறந்துவிட்டிருந்தால் பாராட்டென்ன பாராட்டுவிழாவே எடுத்திருக்கலாம்…..இன்று தானாய் வந்த தண்ணீருக்கெல்லாம் அவரிடம் பேசினால் உரிமைக்கான தண்ணீர் பெற அவரிடம் அழ வேண்டியிருந்தாலும் இருக்கோமோ? – என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories