December 5, 2025, 5:15 PM
27.9 C
Chennai

​வரதட்சணையாக மரக்கன்றுகளை வாங்கிய பள்ளி ஆசிரியர்

14 June25 dowry orisha - 2025ஒரிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள செளதகுலதா எனும் கிராமத்தில் உள்ள ஜகன்நாத் வித்யாபீத் என்ற பள்ளியில் அறிவியல் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் 33 வயதான சரோஜ்கந்தா பிஸ்வால்.

இவருக்கு ராஷ்மிரேகா பாய்தல் என்ற ஆசிரியை மணப்பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். பெண்ணின் தந்தை திருமணத்திற்காக வரதட்சனை அளிக்க முன்வந்தபோது அதனை ஏற்க மறுத்த ஆசிரியர் சரோஜ்கந்தா, வரதட்சனை பெற்றுக்கொள்வதில்லை என தனக்குத்தானே சத்தியம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மணப்பெண்ணின் தந்தை வரதட்சனை கொடுப்பதில் உறுதியாக இருந்ததால், அவரிடம் 1001 பழ மரக்கன்றுகளை வரதட்சனையாக அளிக்குமாறு ஆசிரியர் கூறியுள்ளார்.

திருமணம் நடைபெற்ற ஜூன் 21ஆம் தேதிக்கு முந்தைய நாள் ஆசிரியர் சரோஜ்கந்தாவின் வீட்டிற்கு வரதட்சனையாக 1000 மரக்கன்றுகளை அனுப்பி வைத்தார் அவரின் மாமனார். இவற்றில் 700 மா மற்றும் 300 செர்ரி வகை மரக்கன்றுகள் அடங்கும்.

Balabhadrapur என்ற கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது 1000 மரக்கன்றுகளை வேன் ஒன்றின் மூலம் எடுத்து வந்த சரோஜ்கந்தா, திருமணத்திற்கு வந்தவர்களுக்கு 700 மரக்கன்றுகளை கொடுத்தார்.

மேலும் மாப்பிள்ளை அழைப்பின் போது மேள தாளம், பட்டாசுகள் இல்லாமல் ஒலி மாசுவை ஏற்படுத்தாத வகையில் எளிமையாக அரங்கேற்றினார். அங்கிருந்த கிராம மக்களுக்கும் பழ மரக்கன்றுகளை அவர் வழங்கினார்.

இது தொடர்பாக ஆசிரியர் சரோஜ்கந்தா கூறுகையில், மரக்கன்றுகள் நடுவதால் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய பிரச்சனைகளை சரிசெய்ய இயலும் என்ற கருத்தை “Gachha Ti Pai Saathi Tiye” என்ற மரம்நடும் இயக்கம் ஒன்றின் மூலம் தான் மக்களிடம் எடுத்துரைப்பதாகவும் தன்னுடைய திருமண நிகழ்வினை முடிந்த அளவு பசுமையான முறையில் நடத்த எண்ணியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பழ மரங்களை மக்கள் விரும்பி வளர்ப்பதால் பழ மரக்கன்றுகளை வரதட்சனையாக வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவரினை கரம்பிடித்த மணப்பெண், தன்னுடைய கணவர் வரதட்சனையில்லாமல் திருமணம் செய்ததும், இவரைப் போன்று பிறரும் மரக்கன்றுகளை நடுவதை தீவிரப்படுத்தினால் சுற்றுச்சூழலை காக்க இயலும் என்றார்.

திருமணம் முடிந்த பின்னர் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு எஞ்சிய 300 மரக்கன்றுகளையும் ஆசிரியர் சரோஜ்கந்தா வழங்கினார். தனது மருமகனின் நடவடிக்கை தனக்கு மிகுந்த பெருமையளிப்பதாகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, பேசுவதை விட்டுவிட்டு செயலில் இறங்க வேண்டும் என்பதை அவர் உணர்த்தியுள்ளார் என்றும் மணப்பெண்ணின் தந்தை கூறினார். இந்த திருமணத்தில் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் உட்பட பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டன. திருமணத்திற்கு வந்திருந்தவர்களும் வாழ்க்கை முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

  1. நல்ல விஷயம்.ஆசிரியரின் இந்த நிகழ்வு சமூகத்தில் நல்ல திருப்பம் ஏற்படும் என்று நினைக்கிறேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories