தமிழகத்துக்கு உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு: ஆணையத்தின் முதல் கூட்டத்தில் முடிவு!

CauveryManagementAuthority member masood - 2026

புது தில்லி: தமிழகத்துக்கு ஜூலை மாதம் திறந்து விட வேண்டிய 30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகத் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் உத்தரவு இடப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்புகளிடையே காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று ஆணையத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் உறுப்பினர்களுடன் மத்திய அரசுப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

தில்லியில் மத்திய நீர் வள ஆணையத்தின் தலைமையகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் காவிரி ஆணையத்தின் வரவு – செலவுக் கணக்குகள், மாநிலங்களின் பொறுப்புக்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆணையத்துக்கு நிரந்தர அலுவலகம் அமைப்பது, பணியாளர் நியமனம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக கர்நாடகம் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கர்நாடகத்தின் தரப்பில் இருந்து உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், ஜூலை மாதத்துக்கான தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. அதன்படி தமிழகத்துக்கு 30 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும்.

இந்தக் கூட்டத்தின் போது, ஜூலை 5 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெறும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories