February 20, 2026, 11:45 AM
30 C
Chennai

தமிழகத்துக்கு உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு: ஆணையத்தின் முதல் கூட்டத்தில் முடிவு!

CauveryManagementAuthority member masood - 2026

புது தில்லி: தமிழகத்துக்கு ஜூலை மாதம் திறந்து விட வேண்டிய 30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகத் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் உத்தரவு இடப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்புகளிடையே காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று ஆணையத் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் உறுப்பினர்களுடன் மத்திய அரசுப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

தில்லியில் மத்திய நீர் வள ஆணையத்தின் தலைமையகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் காவிரி ஆணையத்தின் வரவு – செலவுக் கணக்குகள், மாநிலங்களின் பொறுப்புக்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆணையத்துக்கு நிரந்தர அலுவலகம் அமைப்பது, பணியாளர் நியமனம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக கர்நாடகம் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கர்நாடகத்தின் தரப்பில் இருந்து உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், ஜூலை மாதத்துக்கான தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. அதன்படி தமிழகத்துக்கு 30 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும்.

இந்தக் கூட்டத்தின் போது, ஜூலை 5 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெறும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories