தில்லியும் புதுவையும் ஒன்றல்ல; ஆய்வைத் தொடர்ந்தார் து.நி. ஆளுநர் கிரண் பேடி!

kiran bedi - 2026

தில்லியும் புதுவையும் ஒன்றல்ல என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, இன்று தனது ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக, ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இதுதொடர்பாக விவாதம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, இல்லாத அதிகாரத்தை இருக்கும் எனக் கூறுபவர்களை உச்ச நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை அவர் மறைமுகமாக சாடினார். தீர்ப்பை மீறி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றார் அவர்.

மேலும்,  உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ஆளுநர் கிரண் பேடி அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாராயனசாமி கூறினார்.

ஆனால், நாராயண சாமிக்கு பதிலளிக்கும் விதத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, மற்ற யூனியன் பிரதேசங்களுக்குப் பொருந்தும் என்றாலும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் தில்லி யூனியன் பிரதேசங்கள் ஆகியவை வெவ்வேறானவை என்று கூறி, சட்டப் பிரிவு 239 ஏ புதுச்சேரி யூ.பி.க்கு கொடுத்துள்ள அந்தஸ்து குறித்தும் கூறியுள்ளார்.

இதனை தனது டிவிட்டர் பதிவில் விளக்கியிருந்தார் கிரண் பேடி. அவரது டிவிட்டர் பதிவில்…

 

என்று கூறியுள்ளார். இதை அடுத்து, இன்று சோனாம்பாளையம் பகுதியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் கிரண் பேடி.

இருப்பினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியது தவறு என்றும், அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என சோலி சொராப்ஜி கூறியுள்ளார் என்றும் நாராயணசாமி அதே பல்லவியைப் பாடி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories