தில்லியும் புதுவையும் ஒன்றல்ல; ஆய்வைத் தொடர்ந்தார் து.நி. ஆளுநர் கிரண் பேடி!

kiran bedi - 2026

தில்லியும் புதுவையும் ஒன்றல்ல என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, இன்று தனது ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக, ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இதுதொடர்பாக விவாதம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, இல்லாத அதிகாரத்தை இருக்கும் எனக் கூறுபவர்களை உச்ச நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை அவர் மறைமுகமாக சாடினார். தீர்ப்பை மீறி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றார் அவர்.

மேலும்,  உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ஆளுநர் கிரண் பேடி அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாராயனசாமி கூறினார்.

ஆனால், நாராயண சாமிக்கு பதிலளிக்கும் விதத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, மற்ற யூனியன் பிரதேசங்களுக்குப் பொருந்தும் என்றாலும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் தில்லி யூனியன் பிரதேசங்கள் ஆகியவை வெவ்வேறானவை என்று கூறி, சட்டப் பிரிவு 239 ஏ புதுச்சேரி யூ.பி.க்கு கொடுத்துள்ள அந்தஸ்து குறித்தும் கூறியுள்ளார்.

இதனை தனது டிவிட்டர் பதிவில் விளக்கியிருந்தார் கிரண் பேடி. அவரது டிவிட்டர் பதிவில்…

 

என்று கூறியுள்ளார். இதை அடுத்து, இன்று சோனாம்பாளையம் பகுதியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் கிரண் பேடி.

இருப்பினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியது தவறு என்றும், அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என சோலி சொராப்ஜி கூறியுள்ளார் என்றும் நாராயணசாமி அதே பல்லவியைப் பாடி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories