சூதாட்டங்களை சட்ட பூர்வமாக்கலாம்: வரி வருவாய் கிடைக்கும்! மத்திய அரசுக்கு சட்ட கமிஷன் பரிந்துரை!

23 May17 test cricket - 2026கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளை முன்வைத்து, பலரும் பந்தயம் கட்டுதல், சூதாட்டம் மேற்கொள்ளுதல் என முறைகேடான வருமானத்தைப் பார்க்கின்றனர். எனவே அவற்றை சட்டப்பூர்வமாக்கி, அந்த வருமானம் மீது வரிகளை வசூலித்தால், அரசுக்கு வரிவருவாய் கிடைக்கும் என, மத்திய சட்ட கமிஷன் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

ஐபிஎல், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் போன்றவற்றின் போது, சட்டவிரோத சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.  ஐபிஎல்.,லில் இரு அணிகள் சூதாட்ட புகார் காரணமாக போட்டிகளில் தடை விதிக்கப்பட்டும் இருந்தது. சில வீரர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாகி போட்டித் தொடர்களில் இருந்து நீக்கப் பட்டார்கள். எல்லாவற்றுக்கும் காரணம், சட்டவிரோத சூதாட்டம்.

இந்நிலையில், இத்தகைய சூதாட்டம், பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை வரைமுறைப்படுத்தி வரி வரம்புக்குள் கொண்டு வரும் பட்சத்தில் சூதாட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் என மத்திய சட்ட கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் பான் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் கணக்கை இணைக்கும்படி சட்ட ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.  கடுமையான சட்டங்களைக் கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்தை சட்ட பூர்வமாக்க வேண்டும் எனவும் இதற்காக நாடாளுமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

குதிரைப் பந்தயங்கள் போன்றவை நடைபெறும் போது, போட்டி பந்தயங்களும் இதனால் சூடு பிடிக்கக் கூடும்.. மேலும், வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் வகையில் கேசினோ சூதாட்டங்கள், ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் அனுமதிக்கலாம் என சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. வெளிநாடுகள் சிலவற்றில் சூதாட்டங்கள் சட்ட பூர்வமாக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories