சூதாட்டங்களை சட்ட பூர்வமாக்கலாம்: வரி வருவாய் கிடைக்கும்! மத்திய அரசுக்கு சட்ட கமிஷன் பரிந்துரை!

23 May17 test cricket - 2026கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளை முன்வைத்து, பலரும் பந்தயம் கட்டுதல், சூதாட்டம் மேற்கொள்ளுதல் என முறைகேடான வருமானத்தைப் பார்க்கின்றனர். எனவே அவற்றை சட்டப்பூர்வமாக்கி, அந்த வருமானம் மீது வரிகளை வசூலித்தால், அரசுக்கு வரிவருவாய் கிடைக்கும் என, மத்திய சட்ட கமிஷன் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

ஐபிஎல், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் போன்றவற்றின் போது, சட்டவிரோத சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.  ஐபிஎல்.,லில் இரு அணிகள் சூதாட்ட புகார் காரணமாக போட்டிகளில் தடை விதிக்கப்பட்டும் இருந்தது. சில வீரர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாகி போட்டித் தொடர்களில் இருந்து நீக்கப் பட்டார்கள். எல்லாவற்றுக்கும் காரணம், சட்டவிரோத சூதாட்டம்.

இந்நிலையில், இத்தகைய சூதாட்டம், பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை வரைமுறைப்படுத்தி வரி வரம்புக்குள் கொண்டு வரும் பட்சத்தில் சூதாட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் என மத்திய சட்ட கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் பான் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் கணக்கை இணைக்கும்படி சட்ட ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.  கடுமையான சட்டங்களைக் கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்தை சட்ட பூர்வமாக்க வேண்டும் எனவும் இதற்காக நாடாளுமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

குதிரைப் பந்தயங்கள் போன்றவை நடைபெறும் போது, போட்டி பந்தயங்களும் இதனால் சூடு பிடிக்கக் கூடும்.. மேலும், வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் வகையில் கேசினோ சூதாட்டங்கள், ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் அனுமதிக்கலாம் என சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. வெளிநாடுகள் சிலவற்றில் சூதாட்டங்கள் சட்ட பூர்வமாக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories