பல்வேறு பெருமைகளை பெற்ற புதுச்சேரிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாள் சுற்றுப்பயணமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், இயற்கையும், சுகாதாரமும்தான் வாழ்க்கையை சிறப்பானதாக்குகிறது என்றும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சுத்தமாகவும், பசுமையாகவும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறியுள்ளார்
இயற்கையும், சுகாதாரமும்தான் வாழ்க்கையை சிறப்பானதாக்குகிறது : வெங்கையா நாயுடு
Popular Categories



