February 22, 2026, 12:28 AM
26.7 C
Chennai

ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

cricket eng ind odi - 2026

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இங்கிலாந்து சென்று விளையாடி வரும் இந்திய அணி, முதல் போட்டியில் வென்றது. பின்னர் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. இந் நிலையில், மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. எனவே இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகக் கருதப் பட்டது. இதில் வெல்லும் அணியே தொடரைக் கைப்பற்றும் என்பதால், தங்கள் சொந்த மண்ணில் இந்திய அணியிடம் டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி, இந்தப் போட்டித் தொடரை வெல்ல கூடுதல் கவனம் செலுத்தியது.

இந்திய அணி சேஸிங்கில் சிறப்பாக செயல்படும் என்பதால், டாஸ் வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா ஏமாற்றம் அளித்ததால், அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்திய அணித் தரப்பில் அதிக பட்சமாக விராட் கோலி 71, ஷிகர் தவான் 44, தோனி 42 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன் எடுத்தது

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் வின்ஸ், பேர்ஸ்டோ நல்ல தொடக்கத்தைக் கொடுக்க அணி வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டது. அடுத்து வந்த ஜோ ரூட், மோர்கன் ஆகியோர் நிலைத்து நின்று ரன் சேர்க்க, 44.3 ஓவரில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 100 ரன், மோர்கன் 88 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories