ரயில்வே ஒப்பந்த முறைகேடு வழக்கு: லாலு குடும்பத்துக்கு அழைப்பாணை அனுப்பும் வழக்கில் இன்று உத்தரவு

16 29July Lallu prasad - 2026இந்திய ரயில்வே உணவகங்களின் (ஐஆர்சிடிசி) ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பாணை அனுப்புவது தொடர்பான உத்தரவை தில்லி நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ளது.

2004-ஆம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஐஆர்சிடிசி ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கிய வகையில் அவரும், அவரது குடும்பத்தினரும் பலனடைந்ததாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ வாதாடியது. அதை பதிவு செய்துகொண்ட சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக, அப்போதைய ரயில்வே உணவக மேலாளரும், தற்போதைய ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினருமான பி.கே.அகர்வாலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில், லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் தவிர, முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, அவரது மனைவி சரளா குப்தா, ரயில்வே உணவகத்தின் அப்போதைய மேலாளர் பி.கே. அகர்வால், அப்போதைய நிர்வாக இயக்குநர் பி.கே. கோயல், அப்போதைய இயக்குநர் ராகேஷ் சக்úஸனா உள்ளிட்டோரது பெயரையும் சிபிஐ சேர்த்துள்ளது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அவர்கள் தவிர, லாரா புராஜெக்ட்ஸ் (அப்போதைய டிலைட் சந்தைப்படுத்துதல் நிறுவனம்), சுஜாதா ஹோட்டல்ஸ் ஆகிய இரு தனியார் நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, ராஞ்சி, புரியில் உள்ள இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த பிஎன்ஆர் ஹோட்டல், இந்திய ரயில்வே உணவகத்தின் (ஐஆர்சிடிசி) கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டது. பிறகு, அதன் பராமரிப்புக்கான ஒப்பந்தம் விஜய் கோச்சார், வினய் கோச்சார் ஆகியோர் உரிமையாளராக இருக்கும் சுஜாதா ஹோட்டல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அந்த ஒப்பந்தம் வழங்கிய நடவடிக்கையில், லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர், முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, அவரது மனைவி சரளா குப்தா, ஐஆர்சிடிசி அதிகாரிகள் உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories