ரயில்வே ஒப்பந்த முறைகேடு வழக்கு: லாலு குடும்பத்துக்கு அழைப்பாணை அனுப்பும் வழக்கில் இன்று உத்தரவு

16 29July Lallu prasad - 2026இந்திய ரயில்வே உணவகங்களின் (ஐஆர்சிடிசி) ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பாணை அனுப்புவது தொடர்பான உத்தரவை தில்லி நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ளது.

2004-ஆம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஐஆர்சிடிசி ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கிய வகையில் அவரும், அவரது குடும்பத்தினரும் பலனடைந்ததாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ வாதாடியது. அதை பதிவு செய்துகொண்ட சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக, அப்போதைய ரயில்வே உணவக மேலாளரும், தற்போதைய ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினருமான பி.கே.அகர்வாலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில், லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் தவிர, முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, அவரது மனைவி சரளா குப்தா, ரயில்வே உணவகத்தின் அப்போதைய மேலாளர் பி.கே. அகர்வால், அப்போதைய நிர்வாக இயக்குநர் பி.கே. கோயல், அப்போதைய இயக்குநர் ராகேஷ் சக்úஸனா உள்ளிட்டோரது பெயரையும் சிபிஐ சேர்த்துள்ளது.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

அவர்கள் தவிர, லாரா புராஜெக்ட்ஸ் (அப்போதைய டிலைட் சந்தைப்படுத்துதல் நிறுவனம்), சுஜாதா ஹோட்டல்ஸ் ஆகிய இரு தனியார் நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, ராஞ்சி, புரியில் உள்ள இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த பிஎன்ஆர் ஹோட்டல், இந்திய ரயில்வே உணவகத்தின் (ஐஆர்சிடிசி) கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டது. பிறகு, அதன் பராமரிப்புக்கான ஒப்பந்தம் விஜய் கோச்சார், வினய் கோச்சார் ஆகியோர் உரிமையாளராக இருக்கும் சுஜாதா ஹோட்டல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அந்த ஒப்பந்தம் வழங்கிய நடவடிக்கையில், லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர், முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, அவரது மனைவி சரளா குப்தா, ஐஆர்சிடிசி அதிகாரிகள் உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories