ரயில்வே ஒப்பந்த முறைகேடு வழக்கு: லாலு குடும்பத்துக்கு அழைப்பாணை அனுப்பும் வழக்கில் இன்று உத்தரவு

16 29July Lallu prasad - 2026இந்திய ரயில்வே உணவகங்களின் (ஐஆர்சிடிசி) ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பாணை அனுப்புவது தொடர்பான உத்தரவை தில்லி நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ளது.

2004-ஆம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஐஆர்சிடிசி ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கிய வகையில் அவரும், அவரது குடும்பத்தினரும் பலனடைந்ததாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ வாதாடியது. அதை பதிவு செய்துகொண்ட சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக, அப்போதைய ரயில்வே உணவக மேலாளரும், தற்போதைய ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினருமான பி.கே.அகர்வாலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில், லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் தவிர, முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, அவரது மனைவி சரளா குப்தா, ரயில்வே உணவகத்தின் அப்போதைய மேலாளர் பி.கே. அகர்வால், அப்போதைய நிர்வாக இயக்குநர் பி.கே. கோயல், அப்போதைய இயக்குநர் ராகேஷ் சக்úஸனா உள்ளிட்டோரது பெயரையும் சிபிஐ சேர்த்துள்ளது.

அவர்கள் தவிர, லாரா புராஜெக்ட்ஸ் (அப்போதைய டிலைட் சந்தைப்படுத்துதல் நிறுவனம்), சுஜாதா ஹோட்டல்ஸ் ஆகிய இரு தனியார் நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, ராஞ்சி, புரியில் உள்ள இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த பிஎன்ஆர் ஹோட்டல், இந்திய ரயில்வே உணவகத்தின் (ஐஆர்சிடிசி) கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டது. பிறகு, அதன் பராமரிப்புக்கான ஒப்பந்தம் விஜய் கோச்சார், வினய் கோச்சார் ஆகியோர் உரிமையாளராக இருக்கும் சுஜாதா ஹோட்டல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அந்த ஒப்பந்தம் வழங்கிய நடவடிக்கையில், லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர், முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, அவரது மனைவி சரளா குப்தா, ஐஆர்சிடிசி அதிகாரிகள் உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories