மாநிலங்களவை துணைத் தலைவராக பாஜக.,வின் ஹரிவன்ஷ் வெற்றி!

Published:

harivansh - 2026

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் தேஜகூ., வேட்பாளர் ஹரிவன்ஷ் #Harivansh வெற்றி பெற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற்றார். எதிர்க் கட்சி கூட்டணி வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

தேஜகூ., வேட்பாளராகப் போட்டியிட்ட 62 வயதாகும் ஹரிவன்ஷ் நாராயண் சிங், முன்னாள் பத்திரிகையாளர். முதல்முறையாக மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் ஒடிஷா மாநில பொதுச் செயலர் பொறுப்பாளராக இருந்தவர்.முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்கு ஊடக ஆலோசகராகத் திகழ்ந்தவர்.

தங்களது வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒடிஷா முதல்வர் நவீன் பட் நாயக்கிடம் கேட்டுக் கொண்டார். இதை அடுத்து அவரது கட்சி எம்.பி.க்கள் 9 பேரும் ஹரிவன்ஷுக்கு வாக்களித்தனர். மேலும், அதிமுக.,வின்13 எம்.பி.க்களும் ஹரிவன்ஷுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் 20 வாக்கு வித்யாசத்தில் தே.ஜ.கூ., வேட்பாளர் வெற்றி பெற்றார். அவரை பிரதமர், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

மாநிலங்களவையின் முன்னாள் துணைத் தலைவர் பிஜே. குரியன் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து தேர்தல் நடைபெற்றது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

NDA’s candidate wins election.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img