December 5, 2025, 4:26 PM
27.9 C
Chennai

கேரளத்தில் 7 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு: மீட்புப் பணியில் ராணும்!

maxresdefault 15 - 2025
கேரளத்தில் இடை விடாமல் பலத்த மழை பெய்துவரும் நிலையில் 24அணைகள் நிரம்பி அவற்றில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இடுக்கி, எர்ணாக்குளம், பாலக்காடு உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

கேரளத்திலும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாலக்காட்டில் ஆற்றில் பாலத்தின் மேற்பகுதியைத் தொடும் அளவுக்குப் பெருவெள்ளம் பாய்கிறது. அபாய அளவைத் தாண்டி வெள்ளம்பாயும் நிலையிலும் அந்தப் பாலத்தில் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பாலத்தின் மீது நின்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

தமிழகத்தின் தேனி மாவட்டம், கேரளத்தின் இடுக்கி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் கடும் மழை பெய்து வருகிறது. இடுக்கி அணை நிரம்பியுள்ளதால் அணையின் மதகுகள் வழியாக நொடிக்கு நாலாயிரத்து நானூறு கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் இடுக்கி, எர்ணாக்குளம் மாவட்டங்களில் பெரியாற்றங் கரையோரத்தில் உள்ள பல ஊர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளப்பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான மற்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எர்ணாக்குளம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் மழைபெய்வதால் இடுக்கி மாவட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணூர் பல்கலைக்கழகம், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மழை வெள்ளம் ஆகியவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories