கேரளத்தில் 7 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு: மீட்புப் பணியில் ராணும்!

maxresdefault 15 - 2026
கேரளத்தில் இடை விடாமல் பலத்த மழை பெய்துவரும் நிலையில் 24அணைகள் நிரம்பி அவற்றில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இடுக்கி, எர்ணாக்குளம், பாலக்காடு உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

கேரளத்திலும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாலக்காட்டில் ஆற்றில் பாலத்தின் மேற்பகுதியைத் தொடும் அளவுக்குப் பெருவெள்ளம் பாய்கிறது. அபாய அளவைத் தாண்டி வெள்ளம்பாயும் நிலையிலும் அந்தப் பாலத்தில் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பாலத்தின் மீது நின்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

தமிழகத்தின் தேனி மாவட்டம், கேரளத்தின் இடுக்கி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் கடும் மழை பெய்து வருகிறது. இடுக்கி அணை நிரம்பியுள்ளதால் அணையின் மதகுகள் வழியாக நொடிக்கு நாலாயிரத்து நானூறு கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் இடுக்கி, எர்ணாக்குளம் மாவட்டங்களில் பெரியாற்றங் கரையோரத்தில் உள்ள பல ஊர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளப்பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான மற்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எர்ணாக்குளம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் மழைபெய்வதால் இடுக்கி மாவட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணூர் பல்கலைக்கழகம், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மழை வெள்ளம் ஆகியவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories