சபரிமலைக்கு வர்றீங்களா? எச்சரிக்கை! பம்பை ஆத்துல குளிக்காதீங்க! நிலைமை ரொம்ப மோசம்!

Published:

WhatsApp Image 2018 08 10 at 18.50.45 - 2026

கேரளத்தில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரை கொள்ளாமல் ஓடுகிறது. அணைக்கட்டுகள் திறந்து விடப் பட்டுள்ளன.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சபரிமலையில் நிரபுத்ரி பூஜைக்கு வரும் பக்தர்களை பத்தனம்திட்ட மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மலையில் ஏறும் போது மிகவும் எச்சரிக்கையாக ஏறவேண்டும் என்று கூறியுள்ளார் மாவட்ட ஆட்சியர்.

வடசேரிக்கர, நாராயணத்தொடு பகுதிகளில் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. சபரிமலை மின்சார திட்டத்துக்கான அணையும் திறக்கப் பட்டுள்ளது. பம்பை ஆறு கரைகளை உடைத்துக் கொண்டு செல்கிறது. எனவே பம்பை ஆற்றில் நீராட வேண்டும் என்று யாரும் முயற்சி செய்யவேண்டாம். இன்னும் மழை மோசமடையலாம் என்று எதிர்பார்க்கப் படுவதால், வெகு எச்சரிக்கையாக நடந்து கொள்ளவும் என்று பத்தனம்திட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img