தணியாத தமிழார்வத்தை தனியாக வெளிப்படுத்தியவர்: இல.கணேசன் இரங்கல்!

atalji - 2026

சென்னை: மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மறைவுக்கு பாஜக., மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தியில்,  நீண்ட காலமாக அவர் நோய்வாய்ப் பட்டிருந்தாலும் கூட, கடந்த ஓரிரு நாட்களாக அவரது உடல்நிலை குறித்து வேறு விதமாகச் செய்திகள் வந்த போதும் கூட அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களது மறைவு என்பது பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் எனக்குள் ஏற்படுத்தி இருக்கிறது.

நம் வாழ்நாளில் வாழ்ந்த வாழும் மகாத்மா அவர். பாரத நாட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணி ஆட்சியை ஆறு ஆண்டு காலம் அவரால் வெற்றிகரமாக நடத்த முடிந்ததென்றால் அதற்கு வாஜ்பாய் அவர்களது அணுகுமுறை தான் காரணம்.ஏனைய கட்சியைச் சார்ந்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் கூட அவர்களோடு நல்ல முறையிலே பழகக் கூடியவர் அவர்.

தமிழ் மீதும் அவருக்கு நல்ல மரியாதை உண்டு. ஐ.நா. அவையில் பேசும் போது மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் பேசும் போதும் கூட பல நேரங்களில் முதல் நாள் எனக்கு ஒரு செய்தி வரும். பாரதியைப் பற்றி ஏதோ சொன்னீர்களாமே என்று. அவர் என்ன கேட்கிறார் என்பதைப் புரிந்து அதை நான் ஆங்கிலத்திலும், தமிழிலும், தேவநாகரியிலும் எழுதி அனுப்புவேன். மறுநாள் அவர் அதை மேற்கோள் காட்டுவார். “முப்பது கோடி முகமுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்று. தமிழ் மீது இருக்கின்ற ஆர்வத்தை அவ்வப்போது வெளிப்படுத்திச் சொல்வார்கள்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

எத்தனையோ அம்சங்கள், எத்தனையோ நல்ல குணங்கள். நான் அவரோடு நெருங்கிப் பழகி, கணேசன் என்று என்னைப் பேர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தேன் என்பது ஆண்டவன் அருளால் கிடைத்த பாக்யமாகக் கருதுகிறேன். வாஜ்பாய் அவர்களது இழப்பு என்பது ஈடு செய்ய இயலாதது… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories