தணியாத தமிழார்வத்தை தனியாக வெளிப்படுத்தியவர்: இல.கணேசன் இரங்கல்!

atalji - 2026

சென்னை: மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மறைவுக்கு பாஜக., மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தியில்,  நீண்ட காலமாக அவர் நோய்வாய்ப் பட்டிருந்தாலும் கூட, கடந்த ஓரிரு நாட்களாக அவரது உடல்நிலை குறித்து வேறு விதமாகச் செய்திகள் வந்த போதும் கூட அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களது மறைவு என்பது பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் எனக்குள் ஏற்படுத்தி இருக்கிறது.

நம் வாழ்நாளில் வாழ்ந்த வாழும் மகாத்மா அவர். பாரத நாட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணி ஆட்சியை ஆறு ஆண்டு காலம் அவரால் வெற்றிகரமாக நடத்த முடிந்ததென்றால் அதற்கு வாஜ்பாய் அவர்களது அணுகுமுறை தான் காரணம்.ஏனைய கட்சியைச் சார்ந்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் கூட அவர்களோடு நல்ல முறையிலே பழகக் கூடியவர் அவர்.

தமிழ் மீதும் அவருக்கு நல்ல மரியாதை உண்டு. ஐ.நா. அவையில் பேசும் போது மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் பேசும் போதும் கூட பல நேரங்களில் முதல் நாள் எனக்கு ஒரு செய்தி வரும். பாரதியைப் பற்றி ஏதோ சொன்னீர்களாமே என்று. அவர் என்ன கேட்கிறார் என்பதைப் புரிந்து அதை நான் ஆங்கிலத்திலும், தமிழிலும், தேவநாகரியிலும் எழுதி அனுப்புவேன். மறுநாள் அவர் அதை மேற்கோள் காட்டுவார். “முப்பது கோடி முகமுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்று. தமிழ் மீது இருக்கின்ற ஆர்வத்தை அவ்வப்போது வெளிப்படுத்திச் சொல்வார்கள்.

எத்தனையோ அம்சங்கள், எத்தனையோ நல்ல குணங்கள். நான் அவரோடு நெருங்கிப் பழகி, கணேசன் என்று என்னைப் பேர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தேன் என்பது ஆண்டவன் அருளால் கிடைத்த பாக்யமாகக் கருதுகிறேன். வாஜ்பாய் அவர்களது இழப்பு என்பது ஈடு செய்ய இயலாதது… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories