February 21, 2026, 4:45 AM
25.6 C
Chennai

அடல் ஜி : பாரத ரத்னம்

vajpayee - 2026

— ரவிகுமார்

பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்டத்தால் வடிவெடுத்தவர். காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை ஆதரவை பெற்றவராக வல்லபாய் பட்டேல் இருந்தபோதிலும், நேருவை பிரதமராக்கினார் மகாத்மா காந்தி. அடுத்த பதினைந்து ஆண்டுகளில் நேரு தனது நாடாளுமன்ற செயல்பாடுகளால் தன்னை நல்ல நாடாளுமன்ற வாதியாக, வெகுஜன தலைவராக நிறுவிக் கொண்டார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் குடும்ப கட்சியானது.

நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் மூலம் உருவான தலைவர்களுக்கும் குடும்ப அரசியல் தலைமைக்கும் பெருத்த வேறுபாடு வெளிப்படையாக தெரிகிறது. குடும்ப அரசியல் மூலம் வந்தவர்கள் பண்புள்ளவர்களை, திறமையானவர்களை மதிப்பதில்லை. ஜனநாயக தலைமை பண்புகளையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் முழுமையாக வெளிப்படுத்தியதில்லை.

இதற்கு மாறாக ஜனநாயக அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கியவர் அடல் பிகாரி வாஜ்பாய். அவர் பிறந்து தொன்னூற்றிஓன்பது ஆண்டுகள் ஆகின்றன. காலமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இளைஞராக அரசியல் களத்துக்கு வந்தார். கடுமையான, கொதிப்பு மிக்க காலகட்டத்தின் ஊடாக நாடாளுமன்ற ஜனநாயக அரசியலின் மேலெழுந்து ராஜ தந்திரியாக, ராஜரிஷியாக ஆனவர். ஜனநாயக அரசியலின் சிறந்த உதாரணம் அவர்.

ஆர் எஸ் எஸ் ஸின் இந்துத்துவ கருத்தியலால் உத்வேகம் பெற்று, பயிற்சி பெற்று, முப்பத்தி மூன்றாவது வயதில் 1957 இல் நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அவரது அபார பேச்சாற்றலாலும் கருத்தியல் உறுதியாலும் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்தின் விரைவில் புகழ்பெற்றார்.

தேச விடுதலைக்கு பிறகான முப்பதாண்டு ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியின்போது அதற்கு சரியான கருத்தியல் மாற்றாக வாஜ்பாய் வடிவெடுத்தார். ஜன சங்கம்/ பாஜகவை வளர்த்தெடுத்தார். கடுமையான விமர்சனங்களை முன்வைத்த போதும் நனித்தக்க நாகரிகத்துடன் இருந்தன அவரது வார்த்தைகளும் வாதங்களும். பிரதமராக இருந்த நேருவே அவரை பல அயல் நாட்டுத் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருந்தன. பின்னொரு காலத்தில் இவர் பிரதமராவார் என்று நேரு சொன்னதாக ஒரு பேச்சு வழக்கு உண்டு.

அப்படி, அவர் பிரதமரானபோது தேசம் அது வரை கண்டிராததொரு தலைமை பண்பை வெளிப்படுத்தினர். மென்மையாக பேசும் உறுதியான தேசியவாதி என்பதை நாடு மட்டுமல்ல உலகமும் புரிந்து கொண்டது. மூன்று முறை பிரதமராக ஆறாண்டு காலம் ஆட்சி புரிந்தார். 23 கட்சி கூட்டணியை அரவணைத்து நடை போட்டார். மாநில கட்சி தலைவியால் ஆட்சி இழந்த போதும் யார் மீதும் எதிர்ப்பு உணவு இல்லாமல் இருந்த பண்பாளர்.

1998 அணு வெடிப்பு சோதனை வாஜ்பாயின் உறுதியான முகத்தை உலகிற்கு காட்டியது. “பாரதம் இப்பொழுது அணு ஆயுத நாடு. இது மறுக்க முடியாத உண்மை” என்று நாடாளுமன்றத்தில் அவர் தைரியமாக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘தடைகள் வரும் என்று தெரியும். தெரிந்துதான் செயல்பட்டோம். தடைகளை எதிர்கொள்வோம்’, என்றார். தடை விதித்த அமெரிக்காவிலிருந்து பாரதியர்கள் ஏராளமான நிதியை பாரத அரசுக்கு கொடுத்து தடையை தகர்க்க துணை நின்றார்கள். இதுபோன்ற நிகழ்வு பாரத வரலாற்றில் முதல் முறை. அதை நடத்திக் காட்டியவர் அடல் ஜி.

அவர் பிரதமராக மட்டுமல்ல எடுத்துக்காட்டான எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இன்றைய எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்க அவரது மேன்மையும் இவர்களது கீழ்மையும் தெளிவாகத் தெரிகிறது. வங்கதேச விடுதலைப் போரின் போது அவர் பாரத அரசுக்கு ஆதரவு அளித்தார். நரசிம்ம அரசின் போது ஐநா மன்றத்தில் பாகிஸ்தானின் வாதங்களை முறியடிக்க எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை தான் தேர்ந்தெடுத்து அனுப்பியது அன்றைய காங்கிரஸ் அரசு.

பண்டித நேருவின் வாரிசுகள் எனக் கூறிக் கொள்பவர்கள் இவர் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பிறப்பால் வருவதில்லை தலைமை பண்புகள்.  🪷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories