அடல் ஜி : பாரத ரத்னம்

vajpayee - 2026

— ரவிகுமார்

பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்டத்தால் வடிவெடுத்தவர். காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை ஆதரவை பெற்றவராக வல்லபாய் பட்டேல் இருந்தபோதிலும், நேருவை பிரதமராக்கினார் மகாத்மா காந்தி. அடுத்த பதினைந்து ஆண்டுகளில் நேரு தனது நாடாளுமன்ற செயல்பாடுகளால் தன்னை நல்ல நாடாளுமன்ற வாதியாக, வெகுஜன தலைவராக நிறுவிக் கொண்டார். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் குடும்ப கட்சியானது.

நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் மூலம் உருவான தலைவர்களுக்கும் குடும்ப அரசியல் தலைமைக்கும் பெருத்த வேறுபாடு வெளிப்படையாக தெரிகிறது. குடும்ப அரசியல் மூலம் வந்தவர்கள் பண்புள்ளவர்களை, திறமையானவர்களை மதிப்பதில்லை. ஜனநாயக தலைமை பண்புகளையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் முழுமையாக வெளிப்படுத்தியதில்லை.

இதற்கு மாறாக ஜனநாயக அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கியவர் அடல் பிகாரி வாஜ்பாய். அவர் பிறந்து தொன்னூற்றிஓன்பது ஆண்டுகள் ஆகின்றன. காலமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இளைஞராக அரசியல் களத்துக்கு வந்தார். கடுமையான, கொதிப்பு மிக்க காலகட்டத்தின் ஊடாக நாடாளுமன்ற ஜனநாயக அரசியலின் மேலெழுந்து ராஜ தந்திரியாக, ராஜரிஷியாக ஆனவர். ஜனநாயக அரசியலின் சிறந்த உதாரணம் அவர்.

ஆர் எஸ் எஸ் ஸின் இந்துத்துவ கருத்தியலால் உத்வேகம் பெற்று, பயிற்சி பெற்று, முப்பத்தி மூன்றாவது வயதில் 1957 இல் நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அவரது அபார பேச்சாற்றலாலும் கருத்தியல் உறுதியாலும் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்தின் விரைவில் புகழ்பெற்றார்.

ALSO READ:  வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

தேச விடுதலைக்கு பிறகான முப்பதாண்டு ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியின்போது அதற்கு சரியான கருத்தியல் மாற்றாக வாஜ்பாய் வடிவெடுத்தார். ஜன சங்கம்/ பாஜகவை வளர்த்தெடுத்தார். கடுமையான விமர்சனங்களை முன்வைத்த போதும் நனித்தக்க நாகரிகத்துடன் இருந்தன அவரது வார்த்தைகளும் வாதங்களும். பிரதமராக இருந்த நேருவே அவரை பல அயல் நாட்டுத் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருந்தன. பின்னொரு காலத்தில் இவர் பிரதமராவார் என்று நேரு சொன்னதாக ஒரு பேச்சு வழக்கு உண்டு.

அப்படி, அவர் பிரதமரானபோது தேசம் அது வரை கண்டிராததொரு தலைமை பண்பை வெளிப்படுத்தினர். மென்மையாக பேசும் உறுதியான தேசியவாதி என்பதை நாடு மட்டுமல்ல உலகமும் புரிந்து கொண்டது. மூன்று முறை பிரதமராக ஆறாண்டு காலம் ஆட்சி புரிந்தார். 23 கட்சி கூட்டணியை அரவணைத்து நடை போட்டார். மாநில கட்சி தலைவியால் ஆட்சி இழந்த போதும் யார் மீதும் எதிர்ப்பு உணவு இல்லாமல் இருந்த பண்பாளர்.

1998 அணு வெடிப்பு சோதனை வாஜ்பாயின் உறுதியான முகத்தை உலகிற்கு காட்டியது. “பாரதம் இப்பொழுது அணு ஆயுத நாடு. இது மறுக்க முடியாத உண்மை” என்று நாடாளுமன்றத்தில் அவர் தைரியமாக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘தடைகள் வரும் என்று தெரியும். தெரிந்துதான் செயல்பட்டோம். தடைகளை எதிர்கொள்வோம்’, என்றார். தடை விதித்த அமெரிக்காவிலிருந்து பாரதியர்கள் ஏராளமான நிதியை பாரத அரசுக்கு கொடுத்து தடையை தகர்க்க துணை நின்றார்கள். இதுபோன்ற நிகழ்வு பாரத வரலாற்றில் முதல் முறை. அதை நடத்திக் காட்டியவர் அடல் ஜி.

ALSO READ:  துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

அவர் பிரதமராக மட்டுமல்ல எடுத்துக்காட்டான எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இன்றைய எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்க அவரது மேன்மையும் இவர்களது கீழ்மையும் தெளிவாகத் தெரிகிறது. வங்கதேச விடுதலைப் போரின் போது அவர் பாரத அரசுக்கு ஆதரவு அளித்தார். நரசிம்ம அரசின் போது ஐநா மன்றத்தில் பாகிஸ்தானின் வாதங்களை முறியடிக்க எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை தான் தேர்ந்தெடுத்து அனுப்பியது அன்றைய காங்கிரஸ் அரசு.

பண்டித நேருவின் வாரிசுகள் எனக் கூறிக் கொள்பவர்கள் இவர் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பிறப்பால் வருவதில்லை தலைமை பண்புகள்.  🪷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories