ஆரம்பமே கோல்மால்?! இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி?

imran khan narendra modi - 2026

பாகிஸ்தானின் 22வது பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான், அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து  தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அந்தக் கடிதத்தில், இருதரப்பு உறவை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தெரிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சரின் இந்தத் தகவலை மறுத்துள்ள இந்தியா, புதிதாக பிரதமர் பதவியேற்ற இம்ரான் கானுக்கு வாழ்த்து மட்டுமே கூறி, மோடி கடிதம் எழுதியதாக விளக்கம் அளித்துள்ளது.

பாகிஸ்தான் தினசரி பத்திரிகையான டான், இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், ஊடகங்களிடம் பேசிய குரேஷி, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை துவக்கவேண்டும் என்று குறிப்பிட்டு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆனால், பேச்சுவார்த்தையைத் துவக்கலாம் என்று மோடி எழுதியுள்ளதாகக் குறிப்பிடும் குரோஷியின் பேச்சை மறுத்துள்ள இந்திய உயரதிகாரிகள், மோடி ஒரு வாழ்த்துக் கடிதம்தான் எழுதியுள்ளார் என்றும், இம்ரானை வாழ்த்தியே அதில் வாசகம் இருந்தது பேச்சுவார்த்தை குறித்து எதுவும் அல்ல என்றும் கூறியுள்ளனர்.

ALSO READ:  IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

இதே ஊடக சந்திப்பில், பாகிஸ்தான் அமைச்சர் குரோஷி, இந்தியா காஷ்மீர் பிரச்னையின் அவசியத்தை உணர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், நாங்கள் இந்தியாவுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இங்கே சாகசத்துக்கு இடம் இல்லை, நாங்கள் உங்கள் அண்டை நாடு மட்டுமல்ல, அணு ஆயுத சக்தி கொண்ட நாடும் கூட என்று கூறியுள்ளார்.

இஸ்லாமாபாதில் இம்ரான் கானுடன் 21 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்ற சிறிது நேரத்தில் ஊடகத்தினரிடம் பேசிய அமைச்சர் குரோஷி இப்படி மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.

குரோஷி முன்னர் 2008 -2011 காலகட்டத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். நவம்பர் 2008ல் மும்பை தாக்குதல் நடைபெற்ற போது அமைச்சரவையில் இருந்தவர் குரோஷி.

பொதுவாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் டிவிட்டர் பதிவில் தனது கருத்துகளை, நடப்புகளை, தான் நினைப்பதை வெளிப்படுத்துவதில் ஆர்வமாக இருப்பவர். வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பு, வெளிநாட்டு விவகாரங்களில் கருத்து சொல்வது என பலவற்றுக்கும் டிவிட்டரை பயன்படுத்துபவர், இம்ரான்கான் விஷயத்திலும் பாகிஸ்தான் விஷயத்திலும் டிவிட்டரில் எந்தப் பதிவையும் செய்யவில்லை.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

பதவி ஏற்றவுடனேயே கோல்மால் வேலையைத் துவங்கியுள்ளது பாகிஸ்தான் அரசு. கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதி ஆன இம்ரான் கான், கிரிக்கெட்டிலேயே கோல்மால் ஸ்பெஷலிஸ்ட்டாக பெயர் எடுத்தவர். பேண்ட் பாக்கெட்டில் சோடா மூடிகளைப் போட்டு, பந்தை சேதப் படுத்தி, விக்கெட் எடுப்பதற்காக விதிமுறைகளை மீறி கோல்மால் செய்து மாட்டிக் கொண்டவர். ஒரு ப்ளேபாய் ரேஞ்சுக்கு உலா வந்தவர், இப்போது பாகிஸ்தானின் பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கிறார். அந்தப் பழைய வாசனை இப்போது அடிப்பதையே அவரது பேட்டிகளும், அமைச்சரவை சகாக்களின் பேச்சுகளும் வெளிப்படுத்துகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories