வங்கிகள் திவாலாக காங்கிரஸ் ஆட்சியின் ஊழலே காரணம்: போட்டுடைத்த ரகுராம் ராஜன்

raghuram rajan manmohan singh - 2026

புது தில்லி: வங்கிகளில் வராக்கடன் அதிகரித்ததற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியின் ஊழலே காரணம் என்று மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

வங்கிகளில் வராக் கடன்கள் அதிகரித்திருப்பதற்கு விளக்கம் கேட்டும், எப்படி வசூல் செய்வது என்று வழி கேட்டும் மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு கடிதம் எழுதியது நாடாளுமன்ற குழு. இதற்கு பதில் அளித்து நாடாளுமன்ற மக்களவைக் குழுவுக்கு ரகுராம் ராஜன் எழுதியுள்ள கடிதத்தில் சில பகீர் விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

வங்கிகளின் வராக்கடன் அதிகரிப்புக்கு தகுதி இல்லாத மற்றும் ஊழல் மலிந்த வங்கிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களும் தான் காரணம் என ரகுராம் ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

வங்கிகளின் வராக் கடன் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. வங்கிகளின் வராக் கடன் அதிகரிப்பு மற்றும் அதன் பாதிப்புகளுக்கான சூழல், 2006ஆம் ஆண்டு முதலே உருவாகி விட்டது. 2006-2008 ஆம் ஆண்டில் வராக் கடன் அளவு அதிகரித்துவிட்டது. கடன் பெற்றவர்களுக்கு கால அவகாசம் வழங்கி, கடன் வசூல் செய்வதில் வங்கிகள் சுணக்கம் காட்டின. அதுவும் இந்தச் சூழல் பெருக ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் ரகுராம் ராஜன்.

ரகுராம் ராஜனின் இந்தக் கருத்து, ஆளும் பாஜக.,வுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாகக் கருதப் படுகிறது. இதை வைத்தே, காங்கிரஸின் ஊழல் கறை படிந்த கையை அவர்கள் மேலும் குத்திக் கிளறுவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும், மன்மோகன் சிங் பிரதமராக 2வது முறையாக பதவியேற்ற பிறகு, எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஊழல் புகார்களால், பல்வேறு விஷயங்களில் கடினமான முடிவுகள் எடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டியது. இதனால், கடன் வசூலும் பாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார் ரகுராம் ராஜன்.

வராக்கடன்களால் எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும் என்று வங்கிகள் உணர்ந்திருந்தன என்றாலும், அரசியல் காரணங்களால் அவை ஒரு முடிவை எடுக்கத் தயங்கின. மேலும், ரிசர்வ் வங்கி எடுத்த சீர்திருத்த நடவடிக்கைக்களுக்கு அப்போதைய மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று தனது விளக்கக் கடிதத்தில் கூறியுள்ளார் ரகுராம் ராஜன்.

ஏற்கெனவே நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டதாக குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார். இப்போது ரகுராம்ராஜனின் விளக்கக் கடிதம் எரிகிற தீபத்துக்கு மேலும் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories