புரட்சி செய்த கேரள நீதிமன்றம்: ரெண்டு பெண்கள் ஒன்னா சேர்ந்து வாழ அனுமதி!

Published:

judgement - 2026

திருவனந்தபுரம்: ஒரு பாலின சேர்க்கையாளர்களான இரண்டு பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ அனுமதி அளித்து கேரள உயர் நீதிமன்றம் புரட்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளது.

கேரள உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீஜா என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த அருணா என்பவரை அவரது பெற்றோர் பிரித்துக் கொண்டு சென்று, அவர்களின் வீட்டில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளனர் என்று  குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், அந்த மனுவில் ஓரினச் சேர்க்கை குற்றம் ஆகாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

இதை அடுத்து மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, அருணாவை ஆஜர்படுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த  நீதிமன்ற உத்தரவை அடுத்து அருணாவை  போலீஸார் கேரள உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அருணா உயர் நீதிமன்றத்தில் அப்போது தெரிவிக்கையில், தாம் ஸ்ரீஜாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூறினார். இதை அடுத்து ஸ்ரீஜா, அருணா இருவரும் சேர்ந்து வாழ அனுமதி அளித்து கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img