பருவப் பெண்கள் சபரிமலைக்கு வந்தால்… ஆபரணப் பெட்டி வராது! பந்தளம் அரண்மனை சொன்னது உண்மையா?

sabarimalai adi month - 2026

பத்தனம்திட்டா: சபரிமலையின் புனிதத்தையும் கண்ணியத்தையும் தனித்துவத்தையும் குலைக்கும் வகையில் பருவப் பெண்கள் உள்ளிட்ட எல்லா வயதுப் பெண்களும் கோயிலுக்கு வருவதாக இருந்தால், இனி ஆபரணப் பெட்டி கோயிலுக்கு வராது. தந்திரிகளும் கூண்டோடு பதவி விலகுவர் என்று பந்தளம் அரண்மனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளுக்கு பந்தளம் அரண்மனை மறுப்பு வெளியிட்டுள்ளது. இது பொய்யான தகவல் என்று அது குறிப்பிட்டுள்ளது.

பந்தளம் கொட்டாரம் நிர்வாஹக சங்கம், பந்தளம் அரண்மனை செயலர் பி.என். நாராயண வர்மா பெயரிட்டு அனுப்பப் பட்டுள்ள அறிக்கையில், பந்தளம் மன்னர் குடும்பத்தினர் அறிவிப்பு, என்று வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை என்றும், தாங்கள் அவ்விதம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இனி சபரிமலையிலுள்ள பதினெட்டாம் படி தாண்டி ஒரு பெண் சென்றாலும் பந்தள அரண்மனையிலுள்ள ஆபரணப் பெட்டி சபரிமலை சந்நிதானம் வராது. ஆலயம் வேண்டுமானால் அரசு சொத்தாக இருக்கலாம் ஐயப்பனுக்குரிய ஆபரணங்கள் எங்களது குடும்ப சொத்தாகும். அதை யாரும் கட்டாயப்படுத்த இயலாது… என்று பந்தளம் அரண்மனை கூறியதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.

pandalam family release 1 - 2026

மேலும், பெண்கள் நுழைந்த சபரிமலையில் இனி பந்தள மன்னரின் குடும்பத்தினரும் வரமாட்டார்கள் என இந்த அறிவிப்பின் மூலம் தீர்மானமாக அறிவிக்கிறோம் என அரசுக்கும் தேவஸ்தானத்திற்கும் பந்தளம் அரண்மனையில் இருந்து அறிக்கை அனுப்பியுள்ளார்கள் என்றும், தீர்ப்பை கட்டாயமாக்கினால் சபரிமலை தந்திரிகளும் கூட்டாக பதவி விலகுவதோடு இனி சபரிமலைக்கு செல்வதில்லை என தீர்மானித்துள்ளார்கள் என்றும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இவற்றை பந்தளம் அரண்மனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories