புது தில்லி:
தன் அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டதாக தெரிவித்த தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இது ‘கோழைத்தனமான செயல்’ என்று பிரதமர் மோடியை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் அதிகம் தகவல்களை பதிவு செய்தார் கேஜ்ரிவால்.
மத்திய அரசுக்கும் தில்லி அரசுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக கருத்துகளைப் பதிந்தார்.
முதலில் “என் அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளது” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்ததுடன், “மோடியால் என்னை அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடியாத நிலையில், அவர் இந்தக் கோழைத்தனத்தைக் காட்டியுள்ளார். மோடி ஒரு கோழை; மனநலம் பாதித்தவர்” என்று கடுமையாக சாடினார்.
CBI raids my office
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 15, 2015


