சபரிமலை விவகாரத்தில் 144 தடை உத்தரவை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
சபரிமலை விவகாரத்தில், 144 உத்தரவை நீக்கக் கோரி சபரிமலைக்கு சென்ற கேரள எதிர்க் கட்சி தலைவர் ரமேஷ் செனிதலா உள்ளிட்ட எதிர்க் கட்சியினரை நிலக்கல் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் நிலக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, சபரிமலை, பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது கேரள அரசு. சபரிமலைக்கு வருபவர்கள், தனியாக வரமாட்டார்கள் என்பதும், குழுவாக, வெவ்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. இந்நிலையில், 144 தடை உத்தரவு போட்டு, பக்தர்களை பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.