திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக நேற்று இரவு திருமலைக்கு வந்த முகேஷ் அம்பானி பத்மாவதி நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அர்ச்சனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த முகேஷ் அம்பானி அவரது மகள் இஷாவின் திருமண அழைப்பிதழை ஏழுமலையான் கோவிலில் வைத்து சமர்ப்பித்தார்.
முகேஷ் அம்பானிக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.