தெலங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரான சந்திரசேகர ராவ்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் நரசிம்மன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைக்கான தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அபார வெற்றி பெற்றது. தெலங்கானா மாநில உருவாக்கத்திற்காக போராடி மாநிலம் உருவாகக் காரணமான சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.