இரண்டாக உடைந்த காம்பிர் பேட்: யுவராஜ் கிண்டல்

Published:

கோல்கத்தா: நேற்று இரவு நடந்த ஐ.பி.எல். போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீரின் பேட் இரண்டாக உடைந்தது. இது குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார் யுவராஜ் சிங். நேற்றைய மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியில், தொடக்க வீரராகக் களம் இறங்கிய காம்பீர் மும்பையின் வினய்குமார் வீசிய பந்தை இறங்கி வந்து அடித்தார். அப்போது அவருடைய பேட் இரண்டாக உடைந்துவிட்டது. கைப்பிடியுடன் கூடிய பேட்டின் சிறிய துண்டு மட்டுமே காம்பீர் கையில் இருந்தது. இது பற்றி யுவராஜ் சிங் தனது டுவிட்டர் தளத்தில் “இப்போது தான் இது காம்பீர் பேட் போல இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். காம்பீரின் சிறிய உருவத்தை கிண்டல் செய்யும் வகையில் அந்த டுவிட் இருந்ததால், பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. யுவராஜ் கொஞ்சம் கிண்டர் பேர்வழி என்பதால், காம்பிர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்றே சிலர் பின்னூட்டம் இட்டனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img