திருப்பதி பரம்பரை அர்ச்சகர் விவகாரத்தில் அறங்காவலர் முடிவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தடை!

tirupathi archaka - 2026

திருப்பதி:பரம்பரை அர்ச்சகர்கள் ஓய்வு விவகாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முடிவுக்கு ஆந்திர  உயர் நீதிமன்றம் தடை போட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் 65 வயதுக்கு மேற்பட்ட வம்சாவழி அர்ச்சகர்கள் பலர் கைங்கர்யம் செய்துவந்த நிலையில் அவர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கி திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்தது.

அதன் பேரில் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் ஆக பணியில் இருந்த ரமண தீட்சிதலு உட்பட வம்சாவழி அர்ச்சகர் பலருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டது. இது தொடர்பாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வம்சாவழி அர்ச்சகர்களாக பணியாற்றி பணி ஓய்வுக்கு உட்படுத்தப்பட்ட அர்ச்சகர்கள் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

அவர்களுடைய முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், அறங்காவலர் குழுவின் முடிவை ரத்து செய்தும், திருமலை திருப்பதி தேவஸ்தான வம்சாவழி அர்ச்சகர்கள் அவருடைய ஆயுட்காலம் வரை அர்ச்சகர் கைங்கரியம் செய்ய அனுமதி அளித்தும் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய தேவஸ்தான நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories