December 5, 2025, 11:49 PM
26.6 C
Chennai

சபரிமலையில் மொபைல் போனுக்கு வருகிறது தடை! பின்னணி என்ன?

sabarimala pinarayi vijayan - 2025

சபரிமலை சன்னிதானத்தில்
மொபைலுக்கு கட்டுப்பாடு கொண்டுவர முடிவு செய்திருக்கிறது தேவஸ்வம் போர்டு.

சபரிமலை சன்னிதானத்தில் கேமரா அலைபேசி மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று சபரிமலை தேவஸ்வம் போர்டு முடிவு எடுத்திருக்கிறது. அண்மையில் சபரிமலையில் மூலவர் படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறது தேவஸ்வம் போர்டு!

பொதுவாக கேரள கோயில்களில் புகைப்பட, வீடியோ கேமராக்கள் அனுமதிக்கப் படுவதில்லை. சபரிமலையில் அண்மைக்கால சர்ச்சைகளால் அதிக அளவில் ஊடகங்களில் கவனம் பதிந்ததால், இந்த முறை ஊடகங்கள் சபரிமலையைச் சுற்றியே அதிக அளவில் செய்திகளை ஒளிபரப்புகின்றன. மாநிலத்தின் முக்கியப் பிரச்னையாக சபரிமலை பிரச்னை திகழ்வது ஒரு காரணம்.

இந்த முறை தென்மேற்குப் பருவமழை தொடங்கிய சற்று நாட்களில் ஏற்பட்ட வெள்ளம், இயற்கைப் பேரிடர்கள், அவற்றுக்கான சீரமைப்புக்கு குவியும் நிதி, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமை என எல்லாவற்றையும் மறந்து, சபரிமலை விஷயத்தை மட்டுமே பெரிதும் கவனத்திக் கொண்டிருக்கிறது மாநில கம்யூனிஸ அரசு.

சபரிமலைக்கு ஆதரவாக ‘மகளிர் சுவர்’ என்ற மனிதச் சங்கிலிப் போராட்டக் களத்தை கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற பாரம்பரியப் பழக்கங்களுக்கான, சபரிமலை ஐதீகம் காக்கப்பட வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து பெண்கள் லட்சக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவற்றுக்கு மாற்றாக ஒரு பெண்கள் போராட்டத்தை அரசே ஏற்பாடு செய்துள்ளது.

சபரிமலையில் நிகழும் அத்துமீறல்களைக் கண்காணிக்கவும், மக்களிடையே வெளிப்படுத்தவும் ஊடகங்கள் பெரிதும் முன் நிற்கின்றன. குறிப்பாக அண்மையில் தொடங்கப்பட்ட ‘ஜனம் டிவி’ மற்றும் பக்தர்களின் சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம், சபரிமலையில் அரசு மேற்கொண்ட அத்துமீறல்கள், அடாவடிகள் அதிகம் வெளியே தெரிந்ததால், இத்தகைய முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்று கூறுகிறார்கள் பக்தர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories