சபரிமலையில் மொபைல் போனுக்கு வருகிறது தடை! பின்னணி என்ன?

sabarimala pinarayi vijayan - 2026

சபரிமலை சன்னிதானத்தில்
மொபைலுக்கு கட்டுப்பாடு கொண்டுவர முடிவு செய்திருக்கிறது தேவஸ்வம் போர்டு.

சபரிமலை சன்னிதானத்தில் கேமரா அலைபேசி மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று சபரிமலை தேவஸ்வம் போர்டு முடிவு எடுத்திருக்கிறது. அண்மையில் சபரிமலையில் மூலவர் படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறது தேவஸ்வம் போர்டு!

பொதுவாக கேரள கோயில்களில் புகைப்பட, வீடியோ கேமராக்கள் அனுமதிக்கப் படுவதில்லை. சபரிமலையில் அண்மைக்கால சர்ச்சைகளால் அதிக அளவில் ஊடகங்களில் கவனம் பதிந்ததால், இந்த முறை ஊடகங்கள் சபரிமலையைச் சுற்றியே அதிக அளவில் செய்திகளை ஒளிபரப்புகின்றன. மாநிலத்தின் முக்கியப் பிரச்னையாக சபரிமலை பிரச்னை திகழ்வது ஒரு காரணம்.

இந்த முறை தென்மேற்குப் பருவமழை தொடங்கிய சற்று நாட்களில் ஏற்பட்ட வெள்ளம், இயற்கைப் பேரிடர்கள், அவற்றுக்கான சீரமைப்புக்கு குவியும் நிதி, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமை என எல்லாவற்றையும் மறந்து, சபரிமலை விஷயத்தை மட்டுமே பெரிதும் கவனத்திக் கொண்டிருக்கிறது மாநில கம்யூனிஸ அரசு.

சபரிமலைக்கு ஆதரவாக ‘மகளிர் சுவர்’ என்ற மனிதச் சங்கிலிப் போராட்டக் களத்தை கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற பாரம்பரியப் பழக்கங்களுக்கான, சபரிமலை ஐதீகம் காக்கப்பட வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து பெண்கள் லட்சக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவற்றுக்கு மாற்றாக ஒரு பெண்கள் போராட்டத்தை அரசே ஏற்பாடு செய்துள்ளது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

சபரிமலையில் நிகழும் அத்துமீறல்களைக் கண்காணிக்கவும், மக்களிடையே வெளிப்படுத்தவும் ஊடகங்கள் பெரிதும் முன் நிற்கின்றன. குறிப்பாக அண்மையில் தொடங்கப்பட்ட ‘ஜனம் டிவி’ மற்றும் பக்தர்களின் சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம், சபரிமலையில் அரசு மேற்கொண்ட அத்துமீறல்கள், அடாவடிகள் அதிகம் வெளியே தெரிந்ததால், இத்தகைய முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்று கூறுகிறார்கள் பக்தர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Topics

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

Entertainment News

Popular Categories