பண்டிட்களுக்காக தனிக் குடியிருப்பு திட்டம் இல்லை: முப்தி முகமது சயீத்

Published:

mufti-mohammed-syed ஜம்மு: காஷ்மீர் பண்டிட்டுகளை மறுகுடியேற்றம் செய்வதற்காக தனிக் குடியிருப்பு அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது தெரிவித்தார். வியாழக்கிழமை நேற்று அவர் சட்டப்பேரவையில் பேசியபோது, [su_quote]காஷ்மீரில் பண்டிட்களுக்காக தனிக் குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பது குறித்து மத்திய அரசுக்கு எந்த வாக்குறுதியும் மாநில அரசால் கொடுக்கப்படவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில், பண்டிட்கள் தனியாக வாழ முடியாது. அவர்கள், மற்றவர்களுடன் இணைந்துதான் வாழ வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தபோது கூறினேன். இஸ்ரேல் நாட்டில் உள்ளது போன்ற தனித்த குடியிருப்புகளை, பண்டிட்களுக்காக இங்கு அமைக்க முடியாது. பண்டிட்கள், காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு திரும்புவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இருப்பினும் இதை அவசர கதியில் செய்ய விரும்பவில்லை. பண்டிட் சமுதாயத்தினர் காஷ்மீருக்குத் திரும்பி அவர்களுக்கு உரிய இடங்களில் குடியமர வேண்டும். அதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும் [/su_quote] என்றார்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img