சபரிமலையில் நள்ளிரவில் மேலும் இரண்டு பெண்கள் கோயிலுக்குள் செல்வதற்காக வந்திருந்தனர் அவர்களால் மீண்டும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது
சபரிமலைக்கு செல்ல முயன்ற ரோஷ்மா நிஷாந்த், ஷாலினி ஆகிய 2 இளம்பெண்களும் மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பம்பை அடிவாரத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவர்களை மறித்து சபரிமலை பாதுகாப்பு குழுவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்! அவர்கள் இருவரையும் பெருமளவிலான பக்தர்கள் சூழ்ந்து கொண்டு மேலே செல்ல விடாமல் தடுத்தனர். இதையடுத்து அந்த பெண்கள் இருவரும் போலீசாரால் பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்
முன்னதாக அவர்கள் இருவரும் தாங்கள் சபரிமலையை ஐயனை தரிசிக்காமல் திரும்பிச் செல்ல மாட்டோம் என்று அடம்பிடித்தனர். தாங்கள் 41 நாட்கள் விரதமிருந்து ஐயப்பனை காண வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்
9 பேர் கொண்ட குழுவினர் உடன் அவர்கள் இருவரும் வந்ததாக தெரிகிறது. கோயிலுக்குச் செல்லும் வழியில் பம்பை அடிவாரத்தில் இருந்து சற்று தொலைவில் அவர்கள் பக்தர்கள் குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அதிகாலையில் சபரிமலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது!