மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் குறித்த அவதூறு: கிழிந்தது காங்கிரஸின் முகத்திரை!

syed shuja - 2026

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்யலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரசின் திட்டமிட்ட நாடகம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார். அது எந்த வகையிலான நாடகம் என்பதற்கு, ஃபாரின் பிரஸ் அசோஸியேஷனே பல விளக்கங்களை அளித்துவிட்டது. இதன் மூலம், அந்த நிகழ்வில் உடன் இருந்த காங்கிரஸின் கபில் சிபல் நாடகமும் வெளியில் வந்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்து முறைகேட்டில் ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரஸ் கட்சியால் திட்டமிடப்பட்டு பரப்பப் படுகிறது. குறிப்பாக, கடந்த 2014 தேர்தலில் இவ்வாறு செய்யப் பட்டுதான் பாஜக., வென்றதாக காங்கிரஸ் மக்களை நம்ப வைக்க பல நாடகங்களை நடத்தி வருகிறது. இவ்வளவுக்கும், அப்போது ஆளும் கட்சியாக இருந்ததும் காங்கிரஸ், அரசு அதிகாரிகளும் காங்கிரஸுக்கு ஆதரவானவர்கள். இந்த நிலையில், தங்களது தோல்விக்கு மின்னணி வாக்குப் பதிவு இயந்திரத்தில் குளறுபடி என்று கூறி திசை திருப்பி வருகிறது காங்கிரஸ். உள்ளூரில் அதற்கு அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் ஊதுகுழலாக செயல்பட்டனர். இந்நிலையில், அதன் பிரசார திட்டமிடலில் ஒரு நாடகம் தான் அண்மையில் லண்டனில் அரங்கேற்றப்பட்டது.

ஐரோப்பாவுக்கான இந்தியப் பத்திரிகையாளர் சங்கம், திங்கட்கிழமை லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், அமெரிக்காவில் வசிக்கும், இந்திய தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா (Syed Shuja) என்ற இஸ்லாமியர், ஸ்கைப் மூலம் உரையாற்றினார். அப்போது இந்தியாவில் தேர்தல் காலங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். குறைவான அதிர்வெண் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள டிரான்ஸ்மீட்டர் சிப்புகளை ஹேக் செய்ய முடியும் என்றும், இதன்மூலம் எளிதாக முறைகேட்டில் ஈடுபட முடியும் என்றும் சையத் சுஜா கூறினார். இது பத்தோடு பதினொன்று என்று கடந்து போய் விடக் கூடியதுதான். ஆனால், இந்திய ஊடகங்கள் இதனை பெரிய அளவில் செய்தியாகக் கொண்டு சேர்த்தன. இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தொடர்ந்து சர்ச்சைகளும் ஏற்பட்டன.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ECIL எனப்படும் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்-ல், 10 ஆண்டுகள் பணிபுரிந்தேன் என்று கூறினார் சையத் சுஜா. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? என்ற ஆய்வு 2013ல் நடைபெற்றதாகவும், தங்களது குழுவினர், அப்போது அதனை ஹேக் செய்ய முடியும் என நிரூபித்ததாகவும் சையத் சுஜா கூறினார்.

பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே மரணம், பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் மரணம் இவை போன்ற பயத்தினால்தான் தாமும் அச்சப்பட்டு ஒதுங்கியதாகவும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என நிரூபித்ததாலேயே தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் புகுந்து வசித்து வருவதாகவும் ஒரு தகவலைப் பரப்பினார்.

ஆனால், சையத் சுஜாவின் இந்தக் குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. BHELம், ECILம் இணைந்து மிக கவனமான நடைமுறைகளுடன், கடுமையான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரித்து வழங்குகின்றன. இந்நிலையில், இந்த நபர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் மலிவான, முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள் எனக் கூறிய இந்திய தேர்தல் ஆணையம் அவர் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியது.

இந்திய அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த லண்டன் நிகழ்வில், காங்கிரஸ் எம்.பி கபில்சிபல் பங்கேற்றார். இவரது பங்கேற்பு தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

https://twitter.com/deborah_bonetti/status/1087337606030000128

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்திய ஜனநாயகத்தை சீர்க்குலைக்க, காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு ஒருங்கிணைத்ததுதான் இந்த லண்டன் நாடகம். இந்த லண்டன் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் ராய், காங்கிரஸ் கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கூறினார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, லண்டன் நிகழ்ச்சியில் கபில்சிபல் பங்கேற்றது, அவரது தனிப்பட்ட பயணம்! கட்சிக்கும் அவரது பங்கேற்பிற்கும் சம்பந்தமில்லை என்றார். இருப்பினும், சையத் சுஜாவின் குற்றச்சாட்டுகள் தீர விசாரிக்கப்பட வேண்டியவை என்றார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

இதனிடையே, தில்லி காவல்துறையிடம், இந்திய தேர்தல் ஆணையம், செவ்வாய்க்கிழமை மாலை புகார் ஒன்றை அளித்தது. அதில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்து முறைகேடு செய்ய முடியும் என்று அவதூறு பரப்பிய சையத் சுஜா மீது வழக்குப்பதிவு செய்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்து, கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இந்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம் என ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்திய சையத் சுஜா நம்பகத்தன்மை அற்றவர் என, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இத்தாலி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஓர் அமைப்பான சர்வதேச பத்திரிகையாளர் சங்கமும் இதில் இருந்து தமக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளது.

இந்திய மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறேன் எனக் கூறி சையது சுஜா என்பவர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு லண்டன் நகரில் ஜன.,21 திங்கள் அன்று நடைபெற்றது. ஐரோப்பாவுக்கான இந்திய பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தனது அடையாளத்தை வெளிக்காட்டாமல் ஸ்கைப் மூலம் பேசிய சையத் சுஜா, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்தது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் முறைகேடு காரணமாக அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 201 தொகுதிகளை இழந்தது. அப்போது, பாஜக.,வைத் தவிர்த்து, ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் என்னிடம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வது குறித்துத் தெரிந்து கொள்ள தம்மை அணுகின என்று கூறினார்.

இதனால் பாஜக., மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்தது என்று காங்கிரஸுக்கு ஆதரவான கருத்தைக் கூற வந்தார் சையத் சுஜா. ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து குறுக்கு முறையில் வெற்றி பெற காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சிகள் எவ்வளவு தூரம் முயன்றுள்ளன என்பதை சையத் சுஜா அப்பட்டமாக வெளிக்காட்டி விட்டார் என்கிறார்கள் விமர்சகர்கள்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஃபாரின் ஜர்னலிஸ்ட் அசோஷியேஷன் வெளியிட்ட அறிக்கையில், கணினி நிபுணர் ஊழல் மற்றும் 2014 இந்திய தேர்தல் குறித்து மிகத்தீவிரமான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவர் தாம் தாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். கடந்த விழாழக்கிழமை நடந்த தாக்குதலில் இருந்து மீண்டு வருவதாகவும், இதனால் தம்மால் பயணம் செய்ய முடியாது என்றும், ஸ்கைப் மூலம் உரையாடுவதாகவும் கூறினார். மேலும், இந்திய தேர்தல் குறித்து விமர்சனம் செய்ததாலேயே தாம் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்! இந்த ஆண்டு 90 கோடி மக்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். சையத் சுஜா கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ஆனால் அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். சையத் சுஜாவின் குற்றச்சாட்டுகளில் இருந்து நாங்கள் ஒதுங்கிக் கொள்கிறோம். அவரின் குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட நிரூபிக்கப் படவில்லை…. என்று தெரிவித்தது.

இதன் டிவிட்டர் பதிவுகளும், காங்கிரஸின் திட்டமிட்ட நாடகத்தை வெளிக் கொணர்ந்தன.

இந்நிலையில், லண்டன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, இத்தாலிய ஊடகவியலாளர் டேபோரா போனெட்டீ வெளியிட்ட கருத்தில், லண்டன் கூட்டத்தில் சையத்சுஜா கூறிய பல குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை! அவர் தனது குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித ஆதாரத்தையும் காட்டவில்லை. அவர் உண்மையான நபர் இல்லை. அவருக்கு அங்கே பேசுவதற்கு வாய்ப்பு அளித்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories