ஐசிசி கனவு அணி: இந்திய வீரர்களே ஆதிக்கம்! கோலியின் ஆச்சரிய சாதனை!

Virat Kohli May02 - 2026

துபை: ஐசிசி., விருதுப் பட்டியலில் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட், சிறந்த ஒருநாள் வீரர் என ஒரே ஆண்டில் மூன்று விருதுகளையும் தட்டிச் சென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி., சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டு விருதுப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் கோலிக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு பங்கேற்ற 13 டெஸ்டில் 5 சதம் உட்பட 1,322 ரன்கள் (சராசரி 55.08), 14 ஒருநாள் போட்டிகளில் 6 சதம் உட்பட 1,202 ரன்கள் (சராசரி 133.55) எடுத்துள்ளார் கோலி. பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆண்டு இறுதியில் டெஸ்ட் மறும் ஒருநாள் அரங்கில் முதலிடத்தில் இருந்தார்.

இவரது தலைமையிலான இந்திய அணி டெஸ்டில் முதலிடத்தையும் ஒருநாள் அரங்கில் இரண்டாமிடத்தையும் பிடித்தது. இதையடுத்து கடந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான ‘கேரி சோபர்ஸ்’ கோப்பையை கோலி தட்டிச் சென்றார்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஐ.சி.சி., சார்பிலான கனவு ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கும் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டார். ஒருநாள் அணியில் ரோகித் சர்மா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோரும், டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோரும் இடம் பிடித்தனர். சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதை இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச் சென்றார்.

கனவு அணி விவரம்:

டெஸ்ட் : கோஹ்லி (கேப்டன்), டாம் லதாம் (நியூசி.,), கருணாரத்னே (இலங்கை), வில்லியம்சன், ஹென்றி நிக்கோல்ஸ் (நியூசி.), ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர், இந்தியா), ஜேசன் ஹோல்டர் (விண்டீஸ்), ரபாடா (தெ.ஆப்.,), லியான் (ஆஸி.,), பும்ரா (இந்தியா), முகமது அபாஸ் (பாக்.,).
ஒருநாள் அணி: கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (இந்தியா), பேர்ஸ்டோவ், ஜோ ரூட் (இங்கிலாந்து), ராஸ் டெய்லர் (நியூசி.,), ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் (விக்கெட் கீப்பர், இங்கிலாந்து), முஸ்தபிஜூர் ரஹ்மான் (வங்கதேசம்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), குல்தீப் யாதவ், பும்ரா (இந்தியா).

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories