ட்ரெய்ன் 18 பெயர் மாறுகிறது! மேக் இன் இந்தியாவின் வெற்றி என கோயல் பெருமிதம்!

Published:

train 18 - 2026

ட்ரெயின் 18 ரயில் பெயர் மாறுகிறது. இது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்படுகிறது. இதனை பியூஸ் கோயல் அறிவித்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தில், இந்தியன் ரயில்வேயின் உன்னதத் தயாரிப்பாக ட்ரெயின் 18 உருவாகி இருக்கிறது. இதற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயர் சூட்டப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை இன்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்

இந்த ரயில் தில்லியிலிருந்து வாராணசிக்கு அதிகபட்ச வேகமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் துவக்கி வைக்க உள்ளார். இதில் 16 பெட்டிகள் இருக்கின்றன. 18 மாதங்களில் சுமார் 97 கோடி ரூபாய் செலவில் சென்னையில் உள்ள icf integral coach factory இல் இந்த ரயில் கட்டமைக்கப்பட்டது! சதாப்தி எக்ஸ்பிரஸ் வடிவமைத்த அதே ஐசிஎப்பில் தான் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது

ட்ரெய்ன் 18 என்று முதலில் பெயரிடப்பட்ட இதற்கு இப்பொழுது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது இந்திய பொறியாளர்களால் இந்தியாவிலேயே 18 மாத காலத்தில் தயாரிக்கப்பட்ட ரயில்! இது தில்லியிலிருந்து வாராணசிக்கு செல்ல இருக்கிறது உலகத்தரம் வாய்ந்த ரயில் பெட்டிகளை மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்குவதற்கு இது ஒரு உதாரணம் என்று தெரிவித்தார் பியூஷ் கோயல்.

முழுக்க முழுக்க ஏர்கண்டிஷன் – குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் இந்த ரயில் பயணிக்கவுள்ளது. கான்பூர் மற்றும் அலகாபாத் ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்கும். இரண்டு எக்ஸிகியூடிவ் உயர்தர சேர்கார்கள் இருக்கின்றன. இந்த ரயிலுக்காக பல்வேறு பெயர்களை சூட்டி பரிந்துரைகள் வந்தன; இருப்பினும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயர் சூட்டப்பட்டதாக பியூஸ் கோயல் தெரிவித்தார்

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இந்த குடியரசு தின நாளில் மக்களுக்கான அர்ப்பணிப்பு என்று கூறிய கோயல், பிரதமர் மோடியிடம் இதனை கொடியசைத்து துவக்கி வைக்க நேரம் கேட்டிருப்பதாகக் கூறினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img