சமூக வலைத்தளங்களில் உலா வரும் போலி புகைப்படங்களை பகிராதீர்! சிஆர்பிஎஃப் வேண்டுகோள்!

crpf tweet - 2026

புது தில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் என்று குறிப்பிட்டு, ஒரு பாத்திரத்தில் சில கரித்துண்டுகளுடன் போலியான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட போலியான புகைப்படங்களை யாரும் பகிர வேண்டாம் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை – சிஆர்பிஎப் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில், அவர்களின் உடல்கள் முறையாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளின் தொடர்புடையவர்கள், வேண்டுமென்றே மக்களிடம் தங்களின் பயங்கரவாதத்தின் கோர முகத்தைக் காட்டி பயமுறுத்துவதற்காக, இந்தத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் எனக்கூறி போலி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றைக் காணும் மக்கள், உணர்ச்சி வேகத்தில் பரிதாப மேலீட்டால் அதனை வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் பகிர்ந்து வரூகின்றனர். இவற்றால் இவை வைரலாகி வருகின்றன.

இது குறித்து தகவல் அறிந்த சிஆர்பிஎப் அமைப்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த செய்தியில்,

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

நாங்கள் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், பிரிவினை ஏற்படுத்தும் வகையில், சில சமூக விரோதிகள், வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் என போலி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தயவு செய்து யாரும் இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பகிர வேண்டாம். யாருக்கும் அனுப்ப வேண்டாம். இது குறித்து webpro@crpf.gov.in என்ற இமெயில் முகவரியில் புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.

 

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories